பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

9



பிறகு, முருகேசன் தன் ‘காக்கி’ சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து மகனிடம் கொடுத்தான்.

அவன் வாசித்தான் :


பூவைமாநகர்


‘அன்புள்ள முருகேசன்,

பிறந்த ஊரை மறந்து விட்டாயா ? உனக்கு ஒரு நல்ல செய்தியை எழுதவே இந்த லெட்டர் போடுகிறேன். 'என் பசி, ஒருவனின் பசியல்ல; கோடிக் கணக்கான ஏழைகளின் பசி என்று வினோபாஜி பூதான இயக்கத்தின் போது சொன்ன சொற்கள் என் இதயத்தைத் தொட்டு விட்டன. நீ நம் ஊர் நாடி வா என் நிலத்தை உனக்கும் உன் சகோதரர்களுக்கும் பங்கிட்டுத் தருகிறேன்.

இப்படிக்கு


மிராசுதார் சுகவனம்


“அடடே மிராசுதார் ஐயா புது மனுஷராயிட்டாரே?”என்றாள் அஞ்சலை; அவளுக்கு ஆனந்தம் மேலிட்டது.

அப்பொழுது வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு சிறுமி இறங்கினாள் “பூபாலா“ என்று சத்தமிட்டுக் கூப்பிட்டுக் கொண்டே உள்ளே துள்ளி ஓடி வந்தாள்.

“வா பூங்கோதை!” என்று வரவேற்றான் பூபாலன். வாசல் திண்ணை மீது ஒரு கிழிந்த பாயை விரித்து,"உட்கார். இது எங்கள் பங்களாவின் சுழல்நாற்காலி” என்று உபசரித்தான். பிறகு “இதோபார் என்னுடைய மற்றொரு தோழன்,"என்று சொல்லி அந்த நாய்க்குட்டியைக் காட்டினான் பூங்கோதையிடம். அது அமைதியாக அடங்கியிருந்தது.

“பூபாலன், நான் இன்றைக்கு ராத்திரி சினிமாவிலே நடிக்கப் போகிறேன். எங்க அம்மாவும் என் கூட நடிக்கிறாங்க. நீ வர்றியா ஷூட்டிங் பார்க்க?"