பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

123



குழந்தை சிருங்காரபுரியின் இளவரசாக மட்டுமல்லாமல், விளையாட்டுடைய தெய்வமாகவும் சிரித்தது!

அத்தருணம்,"அப்பா.என்னையா நீங்கள் வணங்குவது?” என்றபடி, அங்கு இளவரசி கன்யாகுமரி நின்றாள்!

தாடி - மீசை, உடுப்புகள் தரையில் சிரித்தபடி கிடந்தன.

வேந்தர் பூவேந்திர பூபதி “ஆ!என் மகள்!” என்று அதிசயப்பட்டார். அருமை திருமகளை உச்சி மோந்தார், அன்பு சிலிர்த்தது!

சுய ஞாபகம் மீண்ட வேழநாட்டு அரசன், "நேற்று என் அரண்மனையில் இதே வேடத்தில் வந்ததும் இளவரசிதானா?... என் சூழ்ச்சியை உங்கள் சூழ்ச்சி மிஞ்சி விட்டதே!. படைப்பயிற்சியுடன் கூத்துக் கலையிலும் பலகாலம் பயிற்சியோ?... மகிழ்வுதான்!... சரி! எழுந்திருங்கள். நாம் போர் துவக்கலாம்!. இன்றைய பொழுதே நம் இருநாட்டின் விதியையும் நிர்ணயிக்கட்டும்!” என்று அலறியவாறு, மறுபடியும் சுயகெளரவ வெளியுடன் எழுந்தான். விஜயேந்திரனின் கைகள் இடுப்பு வாளை உருவின!

இளவரசி சிரித்தாள் ; சிரித்துக் கொண்டே இருந்தாள்!

சிருங்காரபுரி மாமன்னர் பூபேந்திர பூபதி அதிர்ந்தார்! அவரது தீட்சண்யப் பார்வை, வேழநாட்டின் மன்னன் விஜயேந்திரனையும், சிருங்காரபுரி நாட்டின் இளவரசி கன்யாகுமரியையும் மாறிமாறி-மாற்றி மாற்றி எடை போட்டிருக்க வேண்டும்!

விஜயேந்திரன், தன் முதுகில் ஏற்பட்டிருந்த ரணத்தின் வலியையும் மறந்து, வாளும் கையுமாகப் போரிட ஆயத்தமாகி தலை நிமிர்த்தி நின்றான்!