பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

15


பையனை ‘கல்தா’ கொடுத்து நெட்டித் தள்ளிவிட்டான் காவல்காரன்.

இருட்டில் கண் தெரியவில்லை. பூபாலன் ஒருமுறை அந்தக் கட்டடத்தை வலம் வந்தான். பிறகு பின்புறமாக வந்து, கவர் மீது ஏறினான். உள்ளே அமைந்திருந்த ‘செட்’ டில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. சிறுமி பூங்கோதைக்கு டைரக்டர் ஏதோ சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பூங்கோதை அழகாகப் பேசி நடித்துக் கொண்டிருந்தாள். அதே சமயம் அங்கு ஒரு சிறுவன் வந்தான்.அவனிடம் டைரக்டர் ஒரு நாய்க்குட்டியைக் கொடுத்து, “ம், நான் சொல்லிக் கொடுத்தபடி நடி, பார்க்கலாம்” என்று சொன்னார். பையனைக் கண்ட அந்த நாய்க்குட்டி குரைத்துக் கடிக்க முயன்றது. சிறுவன் பயந்து அலறினான்.

அதே சமயம், “ஆ என் நாய்க்குட்டி” என்று ஆர்ப்பரித்த வண்ணம் பூபாலன் உள்ளே குதித்து ஓடி வந்தான். அந்த நாய்க் குட்டி அவனைக் கண்டவுடன் சந்தோஷ மிகுதியால் வாலைக் குழைத்தது; அன்புடன் அவனுடைய முகத்தை நாக்கால் நக்கியது.

“பூபாலன், உன்னை எங்கெல்லாம் தேடுவது? உன்னுடைய நாய்க்குட்டியைக் கார்ப்பரேஷன் வண்டிக்காரன் தூக்கிப் போகவில்லை. நாம் பேசிக்கிட்டிருந்தபோது ஒரு சினிமா விளம்பர கார் வந்ததல்லவா? அந்தக் கார்காரன்தான் தூக்கிப் போய் விட்டிருக்கிறான். வழியிலே கண்டுபிடிச்சு, அவனோடு சண்டை போட்டு அதை மீட்டுக்கிட்டு வந்து விட்டோம்!”என்றாள் பூங்கோதை.

அப்போது அவனைத் தேடிக் கொண்டு அவன் பெற்றோர் வந்தார்கள். அன்று கடிதம் போட்டிருந்த மிராசுதார் சுகவனத்தைப் பார்த்துவர பூவைமாநகர் செல்வதாகவும், இரண்டு நாட்களில் திரும்பி விடுவதாகவும் சொன்னான் முருகேசன். அதுவரையில் பூபாலன். பூங்கோதை வீட்டில் தங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.