பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20 அந்த நாய்க்குட்டி எங்கே?



அப்பொழுது ஓர் அதிசயம் நடந்தது.

“பூபாலா, பயப்படாதே!”

எங்கிருந்தோ ஒரு குரல் சூன்யத்தைத் துண்டாடி எதிரொலித்தது. அதே வேகத்தில், பாய்ந்து கொண்டிருந்த அந்தச் சிறுத்தையின் உடலில் ஒரு பட்டாக்கத்தி வந்து பாய்ந்து செருகிக் கொண்டது. மறுகணம் அந்தப் பயங்கரமான சிறுத்தை மாயமாக மறைந்து விட்டது!

என்ன அதிசயம் இது!

பூபாலனின் உடலில் வேர்வை ஊற்றெடுத்துப் பெருகியது.

“பூபாலா, பயப்படாதே! உன்னைப் படிய வைக்க எங்க ‘நைனா’ செஞ்ச நாடகமாக்கும் இது” என்று கூறி கடகட வெனச் சிரிக்கலானாள் சிறுமி அல்லி.

“தங்கச்சி“ என்று உணர்ச்சிப் பெருக்கோடு அழைத்து, அல்லியைத் தழுவிக் கொண்டு ஆனந்தக் கண்ணிர் விட்டான் பூபாலன்.

“அண்ணா, என் அப்பாவின் இஷ்டத்துக்கு இணங்கி நட. நீ சர்க்கஸிலே விளையாட ஆரம்பிச்சா நான்கூட உன்னோட சேர்ந்து விளையாடுவேன். நம்ப ரெண்டு பேராலேயும் எங்க கம்பெனிக்கும் நல்ல பேர் கிடைக்கும். எனக்காக வேண்டியாச்சும் ‘சரி’ சொல்லு, இங்கே உனக்கு எந்தவிதக் குறைச்சலுமே இல்லை. உன் அப்பாவும் அம்மாவும் கூட அடுத்த வாரம் வந்திடுவாங்க” என்று தன் பங்குக்குக் கெஞ்சினாள் அல்லி – அவனுடைய கைகளைப் பிடித்துக் கொண்டே

“ஆகட்டும். ஆனா என் அருமை நாய்க்குட்டி...?” என்று கேட்டான் பூபாலன் வேதனையுடன்.

“இதோ, பார்”என்றார் சுகுமார்.