22 அந்த நாய்க்குட்டி எங்கே?
ஆம்; அதோ பூபாலன் அழகாக உடை உடுத்துக் கொண்டு வந்து வணக்கம் சொல்கிறானே! என்ன விந்தை இது? அவன் எப்படி இவ்வளவு அற்புதமாக ‘பார்’ விளையாடுகிறான்? ஆஹா, அவனுடைய கழுத்தில் எவ்வளவு உரிமையோடு அந்த நாய்க்குட்டி பின்னிப் பிணைந்திருக்கிறது?
பூபாலன் அதிர்ஷ்டமே, அதிர்ஷ்டம்!
மக்களின் ஆரவாரம் மிகுந்தது; ஒரே கைதட்டல். ஆனால் மறுகணம்...?
நாய்க்குட்டியுடன் ’பார்’ விளையாடிக் கொண்டிருந்த பூபாலன் அப்படியே ’தொபுகடீர்’ என்று தாவிப் பாய்ந்தான்.
காம்பவுண்ட் கவரைத் தாண்டி நின்ற அந்த லாரியில் அவன் நாய்க்குட்டியுடன் விழுந்தான்.
அதே சமயத்தில்....
“டுமீல், டுமீல்“ என்ற வெடி ஒலி திக்கெட்டும் பரவியது!
“இப்போது நிறுத்தப்போகிறாயா...? இல்லையா...?”
“முடியாது.”
“முடியாதா?”
“ஆமா, முடியாது”
தம்பி, நீ சிறுபிள்ளை, நான் சொல்கிறதைக் கொஞ்சம் கேள்.”
“முடியாது”
“முடியாதா?”
“முடியாது; முடியாது; முடியாது..!”
“பூபாலன்!”