பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

 23



“ஆ!”

“ஏன் அப்படி அதிசயப்படுகிறாய்?”

“என் பெயர் உமக்கு எப்படித் தெரிந்தது?”

“தெரியும்.”

”விளக்கமாகச் சொல்லுங்கள்.”

“முடியாது!”

“முடியாதா?”

“ஆமாம், முடியாது; முடியவே முடியாது!”

“பழிக்குப் பழியா?”

“இல்லை”

“பிறகு...?”

“அன்புக்கு அன்பு!”

“என்ன, அன்புக்கு அன்பா? முன் ஒரு சமயம் என்னைத் தமிழ்ப் படம் ஒன்றிலே நடிக்கச் சொன்னாங்க. அங்கே இப்படித் தான் அழகான தமிழ் வார்த்தைகள் பேசினாங்க. நீங்கள் அந்தக் கும்பலைச் சேர்ந்தவரில்லையே? பிறகு அன்பைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? எப்படித் தெரியும்? ம்...! ஏன்தான் தெரியப் போகிறது?”

“தம்பி, கொள்ளைக் கூட்டத் தலைவனுக்கு அன்பைப் பற்றி என்ன தெரியும் என்றுதானே நீ சந்தேகப்படுகிறாய்? நியாயம் இருக்கிறது. உன் எண்ணத்தில். தமிழ் ரத்தம் துடிக்கிறது, உன் கேள்வியில். நெஞ்சு இருக்கிறது, உன் கண்ணிரில்!”

“போதும், நிறுத்துங்கள்! வேண்டாம், நீங்கள் பாடம் பண்ணி வைத்திருப்பதையெல்லாம் பேஷாக ஒப்பியுங்கள். ஆனால், என்னை இங்கிருந்து விடுதலை செய்து அனுப்பிவிட மாத்திரம் தடை போட்டு விடாதீங்க."