பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ்.ஆறுமுகம்

25


அவசரமாக எடுத்தான். அவனுடைய கைகள் நடுங்கின. வாய் விட்டுப் படித்தான்.

‘பூபாலா! பயப்படாதே! இன்று இரவு சர்க்கஸ் கூடாரத்தின் வெளி வாசலில் உனக்காக காருடன் காத்திருக்கிறேன்– உன்னுடைய அருமை நாய்க்குட்டியோடு, நல்ல சமயம் பாத்துத் தப்பி வந்து விடு...’

இப்படிக்கு உன் அன்புள்ள தங்கை,
–பூங்கோதை



பூபாலன் அந்தத் துண்டுத் தாளைக் கசக்கி வீசி எறிந்தான். கண்ணிர் கரை உடைத்துப் பொங்கியது. மறுபடியும் தரையில் தலையைப் ‘படார், படார்’ என்று மோதிக் கொண்டான். உறைந்திருந்த ரத்தக் கோடுகளில் செந்நிறம் பாய்ந்தோடிக் கொண்டிருந்தது.

‘பூங்கோதை! தங்கச்சி உன் அன்புக்கு ஈடே இல்லை. எனக்காக, என்னை அந்தப் பாவிப் பயல் சர்க்கஸ்காரன்கிட்டே இருந்து விடுவிக்கிறதுக்காக, நீ எவ்வளவு பாடுபட்டியோ? கடைசியா, எல்லாம் வீணாகிப் போச்சே, புலி வாயிலிருந்து தப்பி சிங்கம் வாயிலே வந்து அகப்பட்டுக்கிட்டேனே? தெய்வமே, என்னைப் பெற்றவங்கதான் அடியோடு மறந்து விட்டாங்க – நீ கூடவா இப்படி மறந்திடணும்? அறியாத வயசு, சின்னப் பையன்; எனக்கா இத்தனை பெரிய சோதனை.?”

சிறுவன் பூபாலன் வாய்விட்டுப் புலம்பினான். சித்தம் தடுமாறியவனைப் போன்று, அப்படிப் பிதற்றினான்.

“அண்ணா!”

வெட்டிப்பாயுமே மின்னல். அம்மாதிரி திரும்பிப் பார்த்தான் அவன்.

அன்பின் அழைப்பு – பாசத்தின் குரல். எங்கிருந்து, யார் இதயத்திலிருந்து வெட்டிப் பாய்கிறது...?