பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


28

அந்த நாய்க்குட்டி எங்கே?



யார் இவன்? இந்தக் கொள்ளைக்காரனா பூங்கோதையின் தந்தை...?

“அப்பா, போதும் இந்த நாடகம்!”

“தம்பி!”

“ஏன்!”

“இதோ பார்!”

“ஆ!”

“நீங்களா? என் பூங்கோதையின் அப்பாவேதான்! ஏன் இந்தக் கொள்ளைக்காரன் வேஷம்?”

“உன்னைக் காப்பாற்றத்தான்!”

“இல்லை, ஏமாற்ற...!”

“ஆமா, அண்ணா மூணு நாளைக்கு முன்னாலே அப்பாவுக்கு ஷூட்டிங் இருந்திச்சு. படமுதலாளி, அப்பாவுக்கு இந்தக் கொள்ளைக்கார வேஷம் தந்திருந்தாங்க. அதே வேஷத்தோடேதான் உன்னைக் காப்பாற்ற வந்தாங்க - ரகசியம் வெளியே தெரிஞ்சுடக் கூடாதல்லவா? மூணு நாளாகக் கெஞ்சுறாங்க அப்பா. நீ மனசு மாறவேயில்லை. என்ன, அப்படிப் பார்க்கிறே, ஆமாம், நான் இப்போது இருக்கும் இடம் ஸ்டுடியோவேதான். நீ முன்பு நடிக்கப் பழகிக்கிட்டியே அதே இடம்தான். படப்பிடிப்புக்காக வேண்டி திருடர்கள் குகையா கட்டப்பட்டிருக்குது – அவ்வளவு தான்! அண்ணா, என் சொல்லை, அப்பாவின் சொல்லை இனியாவது கேளு. ரொம்பவும் ஜாக்கிரதையாக நீ இருக்கணும். இல்லாமப் போனா அந்தப் பாவி சர்க்கஸ்காரன் திரும்பவும் உன்னைப் பிடிச்சிக்கிட்டுப் போயிடுவான்!” என்றாள் பூங்கோதை.