பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3G அந்த நாய்க்குட்டி எங்கே?


நான் என் நாய்க்குட்டியைத் தேடி எமலோகம் போயிருப்பேன். பெற்றவங்க அன்புண்ணா அது என்னான்னு நான் கேட்க வேண்டிய நிலையில் இருக்கேன். ஆனா உன் அன்பைப் பற்றி, என் பேரிலே நீ கொண்டிருக்கிற அந்தப் பாசத்தைப் பற்றி நான் மணிக்கணக்கிலே பேசுவேன். ஆனா ஒண்ணு மேலே இருக்கிறதாச் சொல்றாங்களே, அந்த ஆண்டவன் நம்ப ரெண்டு பேர் அன்பையும் அறிஞ்கக்காம இருந்தாரோ, நாம் பிழைச்சோமோ, பூதக் கண்ணாடி வச்சு இந்த ரகசியத்தைப் புரிஞ்சுக்கிட்டாரோ, அப்புறம் நமக்கு சோதனை காட்ட அவர் மூளை துரிதமாக வேலை செய்ய ஆரம்பமாகிடும்....!”

‘களுக்’கென்று சிரித்தாள் பூங்கோதை முத்துப் பற்கள் பிஞ்சு உதடுகளுக்கு அழகு சேர்த்தன.

“அண்ணா, நீ இப்படிப் பேசுறதைக் கூட திரை மறைவாத்தான் வைத்துக் கொள்ள வேணும். முன்னே, உன்னைப் படத்திலே நடிக்க எங்க அப்பா வலை போட்டாங்க, அப்புறம் உன்னைச் சர்க்கஸிலே விளையாடச் செய்ய ஒரு பாவி சதி செஞ்சான். இப்போ நீ அழகாப் பேசற துப்பு – வெளியே தெருவே பரவினா, பிரசங்கம் செய்யறதுக்கு உன்னை யாராச்சும் ஏரோப்ளேனிலே தூக்கிட்டுப் பறந்திடப் போறாங்க உஷார்! கபர்தார்!”

“நீ கூட ஜாக்கிரதையாக இருக்கணும், தங்கச்சி நீ பேசத் தொடங்கிட்டா என் காதிலே தேன் வந்து பாயுது. அப்புறம் நான் அடையும் சந்தோஷத்திலே திரும்பவும் மயக்கம் வந்திடப் போகுது!” என்று பதிலுக்குச் சொல்லிவிட்டுப் பலமாகச் சிரித்தான் பூபாலன்.

“அண்ணா, இன்னும் கொஞ்சம் சிரி அண்ணா...! சிரிச்சுக்கிட்டே இரு அண்ணா! இந்த மாதிரிச் சிரிப்பைக் கண்டு எத்தனை யுகமாயிடுச்க...?”

“தங்கச்சி!”