பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

34



பூபாலனால் மேற்கொண்டு பேச முடியவில்லை. கண்களில் பொங்கி வந்த கண்ணீர், வாய்க்குள்ளிருந்து புறப்பட்ட வார்த்தைகளைத் தடுத்துவிட்டது.

அப்பொழுது ...

“தம்பி” என்ற இரட்டைக் குரல் ஒன்றாக ஒலித்தது.

பூபாலன் திரும்பினான்.

அங்கே அவனுடைய தாய் தந்தையர் நின்றார்கள்.

அவன் தலையைத் திருப்பிக் கொண்டான். “நம்ப மாரியம்மன் கிருபைதான். அப்பா மேலே நீ கோபப்படாதே, தம்பி. அந்த சர்க்கஸ்கார ஐயாதான் உன் அப்பாவுக்கு வேலை வாங்கிக் கொடுத்தாங்க. உன்னை பெரிய சர்க்கஸ்காரனாக ஆக்கிப்பிடுகிறதாகவும் சொன்னாங்க. ஆனா, இப்படியெல்லாம் இல்லாததும் பொல்லாதும் நடக்குமின்னு நாங்க என்னத்தைக் கண்டோம்? நாம் இனி நம்ப பிறந்த இடத்திலேயே தங்கி வெள்ளாமை விளைச்சலைப் பார்த்துக்கிட்டிருப்போம்... போதும், பட்டணத்து வாழ்வு!” என்று சொல்லிக் கண்ணீர் பெருக்கினாள் பூபாலனின் அன்னை.

“ஆமாம், தம்பி” என்று சொல்லித் தன் மகனின் முகத்தை அன்போடு வருடினான் முருகேசன், -

திக்கு திசை எதுவும் புரியவில்லை பூபாலனுக்கு அருகே நின்று தன்னையே அன்புப் பொங்கப் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி பூங்கோதையை நோக்கினான் பூபாலன்.

“தங்கச்சி, நான் இப்போ எங்கே இருக்கிறேன்?”

“எல்லாரும் உங்க பிறந்த ஊரிலேதான் இருக்கிறோம்– பட்டணத்திலே இல்லே! அண்ணா, உனக்கு நிம்மதி கிடைக்க வேண்டுமென்றுதான் இங்கே பூவைமாநகருக்கு உன்னைக்