பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ்.ஆறுமுகம்

37


வேறு ஏதோ ஒரு நாய்க்குட்டியைக் காட்டி அதுதான் காணாமல் போன என்னுடைய நாய்க்குட்டி என்று பொய் சொல்லி, என்னை ஏமாற்றப் பார்த்தார். கடைசியில் என்னுடைய அந்த நாய்க்குட்டியும் கிடைத்தது. ஆகவே, அவருடைய மகள் அல்லி என்ற சிறு பெண்ணின் அன்பு நிறைந்த நிர்ப்பந்தத்தின் பேரில் நான் அங்கு தங்கினேன். எனக்கு என்னவோ சர்க்கஸ் விளையாட்டு வெறுப்பாகயிருந்தது. ஆனால் நான் சர்க்கஸில் விளையாட ஆரம்பித்ததிலிருந்துதான் அவருக்கு நிறைய வசூலானது. ஒரு நாள் இந்தச் சர்க்கஸ்காரனை ஏமாற்றிவிட்டு ஓடி விட முன் கூட்டியே நான் திட்டங்கள் போட்டிருந்தேன். நானும் என் அருமை நாய்க்குட்டியும் ‘பார்’ விளையாடிக் கொண்டிருக்கையில், காம்பவுண்ட் சுவருக்கு அருகில் தயாராக நின்ற என் உயிர் தோழி – அன்புச் சகோதரி பூங்கோதையின் காரில் குதிக்கப் போன சமயம், என் ரகசியத்தை எப்படியோ துப்பறிந்திருந்த இவர் என்னைக் குறிபார்த்துச் சுட்டார். நான் தப்பித்துக் கொண்டேன். நான் மட்டுமே காரில் தொப்பென்று விழுந்தேன். என் நாய்க்குட்டி கை தவறி விட்டதை அப்புறம்தான் அறிந்துகொண்டேன். என் நாய்க்குட்டி இறந்து விட்டதாக அடுத்த நாள் பேப்பரில் படித்தேன். அதிலிருந்து எனக்கு மூளை குழம்பி விட்டது. கடைசியில் என் மனத்தின் அமைதிக்காகப் பட்டணத்தை விட்டு பூவைமாநகருக்கு வந்தேன்.

என் பெற்றோர் பேரில் நான் கொண்டிருந்த ஆத்திரத்தையும் அவர்கள் மாற்றி விட்டார்கள். சென்ற வாரம் சூட்டிங்கில் தேர்த் திருவிழாவில் – நானும் பூங்கோதையும் நடித்தோம்.

கோதையின் பிறந்த நாள் பரிசாக ஏதாவது கொடுக்க வேண்டுமென்று எண்ணியவாறு நடந்து முன் சென்ற போது, வழியில் ஒரு புத்தம் புதிய வைரச் சங்கிலி கிடக்கவே, சடக்கென்று அதை எடுத்து சமயோசிதமாக என் அன்புக் கோதைக்கு பரிசளித்து விட்டேன். அவளோ அதையே கழற்றி எனக்குத் தன் பரிசாகத் திரும்பப் போட்டு விட்டாள் சிறிது நேரம் சென்றதும் என்னை நோக்கி ஒரு கத்தி வருவது கண்டு விலகிக் கொண்-