பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

அந்த நாய்க்குட்டி எங்கே?




பூபாலன் ஆவல் பொங்கப் படித்தான் :

பிரசித்தி பெற்ற சர்க்கஸ் முதலாளி கைது செய்யப்பட்டார். அவர் வளர்த்த பெண் அல்லியும் ஒரு பெரிய நாய்க்குட்டியுமே அவரைக் காட்டிக் கொடுத்து விட்டன. அவர் பெரியதொரு கள்ளநோட்டுத் தயாரிப்பாளர் என்ற ரகசியத்தை இந்த நாய்க்குட்டி மூலம்தான் போலீஸ் இலாகாவினர் அறிந்தார்களாம். இந்த நாய் மவுண்ட்ரோட் போலீஸ் ஸ்டேஷனில் நின்று குரைத்து சில சைகைகள் செய்ததன் பேரில், போலீஸ்காரர்கள் சிலர் அதைப் பின் தொடரவே அது சர்க்கஸ் கூடாரத்தை அடுத்த பங்களாவிலிருந்த பாதாளச் சுரங்கத்துக்கு வழிகாட்டியது. கூடியிருந்த சிலபேர் கைது செய்யப்பட்டனர். சுகுமாரன் அப்பொழுது அறந்தாங்கியில் இருப்பதறிந்து, அந்த போலீஸுக்குத் தகவல் அனுப்பி உடனே அவரையும் கைது செய்து விட்டார்கள்.

சென்னை போலீஸ் இலாகா பராமரிக்கும் ‘துப்பறியும் நாய்களுக்கு’ இருக்கும் சில பண்புகள் இதற்கும் இருப்பதால், இதைத் தாங்களே வைத்துக் கொள்ள எண்ணி இந்த நாயின் விவரத்தை அறிய-முயன்றார்கள். இது பூபாலன் என்ற சிறுவனின் நாய் என்ற செய்தி கிடைத்தது. சிறுவனுக்கு வஞ்சனை செய்தவனைக் கடைசியில் பழி வாங்கிவிட்ட இந்த நாயின் நன்றிக் கடனைப் பற்றித்தான் ஊரெல்லாம் ஒரே பேச்சாக இருக்கிறது. ஆம்; இந்த நாய்க்குட்டிக்குத்தான் ‘கோஹினூர்’ என்ற செல்லப் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள் போலீஸ் இலாகாவிலே!'

பூபாலன் உணர்ச்சி வசப்பட்டு அப்படியே நின்றான்.

“தம்பி பூபாலன்! நான்கு அதிசயங்கள் நடந்து முடிந்தன. இப்பொழுது ஐந்தாவது அதிசயம் நடக்கவிருக்கிறது. உன்னுடைய நாய் கோஹினூர் சாதித்த நல்ல செயலுக்கு தமிழக அரசினர் உன்