பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

47


நாய்க்குப் பரிசாக ஒரு தங்கப் பதக்கத்தையும் உனக்கு இருநூறு ரூபாய் ரொக்கப் பரிசையும் எங்கள் மூலம் அனுப்பியிருக்கிறார்கள். கோஹினுரை நீ பிரியப்பட்டு சென்னை போலீஸ் இலாகாவுக்கு அனுப்பினால், பெருமையுடன் பெற்றுக் கொள்வதாகவும் செய்தி அறிவிக்கும்படி எழுதியிருக்கிறார்கள். ஆனால், உன் கதையை முழுதும் அறிந்த பிறகு, அந்த வேண்டுகோளை உன்னிடம் கூறவே மனம் மருகிற்று. ஆகவே, இந்த கோஹினூர் உன்னுடனேயே இருக்கட்டும்” என்று சொல்லிய போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கப் பதக்கத்தை நாயின் கழுத்தில் மாட்டினார்.

வாலைக் குழைத்துச் சிரித்த கோஹினூரை முகத்தோடு முகம் பொருத்திக் கொஞ்சினான் பூபாலன்.

“எல்லாருக்கும் என் வணக்கமும் நன்றியும். எனக்குப் புது உலகப் புது வாழ்வு தந்த அன்பு ஜீவன் அருமை கோஹினூர். என் உயிருள்ள மட்டும் அதை என்னால் மறக்கவே முடியாது...!” என்று பூபாலன், உணர்ச்சி பொங்கும் குரலில் சொன்னான்.

“பூபாலன் அண்ணாச்சி! எங்க படத்திலே இன்னொரு காட்சி எடுக்க வேண்டியிருக்குதாம். அதிலே நீ, நான், அல்லி, உன் கோஹினூர் எல்லாருமே சேர்ந்து நடிச்சிடுவோம்...ம்! ஓ.கே. சொல்லித் தீரணும்...! நாளைக்குப் பட்டணத்துக்குப் பயணப்படணும்...!”

“பூங்கோதை ! உன் பேச்சைத் தட்டிப் பேச எனக்கு ஏது உரிமை?” என்றான் பூபாலன், கண்களைச் சிமிட்டியபடி,

உடனே, எல்லோரும் சேர்ந்து ‘களுக்’கென்று சிரித்தார்கள். ஆமாம்; கோஹினூரும் சேர்ந்துதான்!.