பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

மாஸ்டர் உமைபாலன்



என்ன ஆச்சரியம்!

உமைபாலன் பதின்மூன்று காசை மட்டிலும் எடுத்துக் கொண்டு, மிகுதியை உரியவரிடமே திருப்பிக் கொடுத்தான்."என் உழைப்புக்கு இது கூட அதிகம்னு தோணுதுங்க, பெரியவரே!” என்று மிடுக்குடன் பதில் கூறியபடி, வணக்கம் சொல்லி நடந்தான்.

ஓர் இட்டிலியும் ஒரு சாயாவும் அந்த சிறிய கும்பிக்குப் போதும் போலும்!

அடுத்தது ஓட்டல் வந்தது. ஆம் ஓட்டல் வரவில்லை; அவன் ஓட்டலுக்கு வந்தான். நுழைவாசலில் வைத்திருந்த படங்களைக் கண்டதும் அவன் கரங்குவித்தான். கல்லாவில் இருந்த முதலாளியிடம் பணிவுடன் நெருங்கி ஏதாவது வேலை கிடைக்குமா என்று கேட்டான்; கடையின் சொந்தக்காரர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னான்.

“காலையிலே வா தம்பி! யோசிச்சுச் சொல்லுறேன்!”

“நல்லதுங்க, ஏழை பாழைங்களோட நல்ல வாழ்வுக்காகவே அல்லும் பகலும் உழைச்சுக்கிட்டு வர்ற அந்தத் தமிழ்த் தலைவரை நீங்க பூசிக்கிறதிலேருந்து, இந்த ஏழைச் சிறுவனுக்கும் நல்ல வழி கெடைக்குமிங்கிற நம்பிக்கையோட நான் விடிஞ்சதும் உங்களை வந்து சந்திக்கிறேனுங்க, ஐயா!”

உரிமையாளர் புன்னகையுடன் தலையை அசைத்து அவனுக்கு விடை கொடுத்தனுப்பினார்.

தெருவில் அன்றைய மாலைப் பதிப்புப் பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்தவரிடம் உமைபாலன் மெல்ல அண்டிப் பார்த்தான். பார்த்த சடுதியில் அவனது முகம் கலவரம் அடையத் தொடங்கிவிட்டது.