பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாஸ்டர் உமைபாலன்




2

புன்னகை சிந்தப் பழகுகின்ற பாப்பாவைப் போன்று இளஞ் சூரியன் அப்போதுதான் பூவுலகைத் திரும்பிப் பார்த்துப் புன்னகை சொரியத் தொடங்கியிருந்தான்.

கீழ்வாசல், மிகுந்த அழகுடனும் நிறைந்த சுறுசுறுப்புடனும் விளங்கிக்கொண்டிருந்தது.

உமைபாலன் துவைத்து உலர்த்திய உடுப்புகள் துலாம்பரமாகப் பளிச்சிடவும், நெற்றியில் பூசப்பட்ட திருநீறு பக்திபூர்வமாக மின்னவும் நடந்து வந்து, நேற்று வரச்சொன்ன அந்த ஓட்டலுக்குள் பிரவேசித்தான். அவன் தன்னையும் அறியாமல், கைகளைக் குவித்து வணங்க எத்தனம் செய்தான்.

ஆனால், என்ன ஏமாற்றம்!

கல்லாவில் தடிமனான மனிதர் ஒருவர் அல்லவோ வீற்றிருந்தார்!....

பின்வாங்கினான். உணவுக் கடையின் பெயரை மீண்டும் படித்தான். அட்டியில்லை; ‘லக்ஷ்மி விலாஸ்’ ஓட்டல் தான்!

சிறுவன் அறிந்ததுண்டு–கும்பிடு சொடுத்துத்தான் கும்பிடு வாங்கவேண்டும் என்பது! ஆகவே, கும்பிட்டான். ஆனால் பாவம், அவன் பதிலுக்குக் கும்பிடு வாங்கவில்லை. ‘நேற்றுப்பார்த்த அந்த ஆள் எங்கே?’ என்று மனம் மறுகினான். இவர் இப்படி அழுத்தமாக இருக்கிறாரே?....

‘ம்... வாஸ்தவந்தான் நானோ வேலைக்கு வந்தவன். இவரோ முதலாளி. ‘பெரிய’ முதலாளி... பெரிய உடம்புள்ளவர் பெரியவர் இல்லையா, பின்னே?...அவரும் எனக்குச் சமதையாய் கும்பிட்டு விட்டால், அப்பால், கும்பிடு என்கிறதற்கு அர்த்தம் இருக்காதே!...” வேடிக்கையான சிந்தனைகளை வினயமாகப் பின்னினான் அவன்.

கல்லா மனிதரை ஒரு முறை உன்னிப்பாக நோக்கினான் உமைபாலன். இரட்டை நாடியான உருவம். யானைக்குட்டியை