பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

மாஸ்டர் உமைபாலன்


படுக்க மாட்டான், தம்பி!.... உன்னுடைய தாய்நாட்டுப் பற்று ரொம்பவும் உயர்வு!...”என்று போற்றினான்.

பையனுக்குப் போன உயிர் திரும்பியது.

பிறகு, பெரியவருடன் அவ்விளைஞன் ஏதோ பேசினான். “நீ சொன்னாச் சரிடா கோபு!” என்று முடிவு வெளியிட்டார் அவர்.

கோபு குதூகலத்துடன் திரும்பினான் “தம்பி உள்ளே வா” என்று அழைத்துச் சென்றான். தம்பி என்ற அச்சொல் அவனைப் புல்லரிக்கச் செய்தது.

இருபுறமும் அற்புதமாக அலங்காரம் செய்து போடப்பட்டிருந்த நாற்காலிகளும், அவற்றின் உச்சியில் அலங்காரம் செய்த வண்ணம் இருந்த சுவாமி படங்களும் சிறுவனின் பிஞ்சு மனத்தைக் கவரலாயின.

“தம்பி!”

உள்ளே எட்டிப் பார்த்தான்.

அது ஒரு கிட்டங்கி.

மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. டின்கள் வேறு வேறு சின்னப்பையன் ஒருவன் குந்தியபடி அரிசி அளந்து கொண்டிருந்தான். அவன் வேர்வையை வழித்துவிட்டுக்கொண்டு ஒயிலாகத் தன்னுடைய சட்டைக் காலரைத் தூக்கிவிட்டபடி, உமைபாலனை ஜாடையாகப் பார்த்துச் சிரித்தான்,

சிறுவர் பட்டாளத்துக்குப் பொழுதுபோக்குவதற்குக் கூட இன்னொரு புள்ளி கிடைத்துவிட்டது என்கிற மனோபாவத்தில் விளைந்த சிரிப்புப் போலும்! ஆனாலும், அவனுக்கென்று இப்படி ஒரு கர்வமா?

உமைபாலன் நடந்தான்.