பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அந்த நாய்க்குட்டி எங்கே?



இப்போது, அடுத்ததாக, இந்தச் சிறுவர் - சிறுமியர் நூலும் வெளிவருகிறது. ‘அந்த நாய்க்குட்டி எங்கே?, மற்றும் இளவரசி வாழ்க என்னும் முத்தான மூன்று நாவல்களைக் கொண்டது இந்நூல்: இதுவும் கட்டாயம் பேர் சொல்லும். மணிமேகலைப் பிரசுரத்தின் உடைமையாளச் சகோதரர்கள் திருவாளர்கள் லேனா தமிழ்வாணன் அவர்களுக்கும் ரவி தமிழ்வாணன் அவர்களுக்கும் நான் நிரம்பவும் கடமைப்பட்டவன்!

என்னுடைய எழுபத்தோராவது பிறந்த நாளை நினைவுகூரச் செய்யும் வகையில், என்னுடைய இவ்விரு நூல்களும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன! – நான் பாக்கியவான்தான்!

இடையில் நான் நோய்வாய்ப்பட்டுத் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றிருந்த நாட்களில் என்னுடைய இவ்விரு நூல்களின் கைப்பிரதிகளை என் சார்பில் பதிப்பகத்தில் சேர்ப்பித்து உதவிய மெய்யன்பர் திரு. கு. சண்முகசுந்தரம் அவர்களை நான் நாளும் பொழுதும் நன்றியுடன் நினைப்பேன்.

உங்கள் அன்பிற்குகந்த ‘பூவையைக் கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பாராட்டியும் வாழ்த்தியும் வருகின்ற இலக்கிய ஆர்வலர்களாகிய உங்களை நான் மறந்துவிட மாட்டேன். நன்றி!

சென்னை – 600 045 அன்புடன்,

25–6–1966. பூவை எஸ். ஆறுமுகம்