பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

மாஸ்டர் உமைபாலன்


          “ஜாதிகள் இல்லையடி பாப்பா – குலத்
           தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம்!”

என்று பாடியது ரேடியோ.

அலுப்புக்கொண்டு தலையை வடபுறம் திரும்பினார்.

அங்கே, தேசத்தலைவர்கள் விஷமப் புன்னகையை வேதனையுடன் சிந்தியபடி காட்சி தந்தார்கள்.

இப்போது அதிபருக்கு மனத்தை என்னவோ செய்தது. திரும்பிப் பார்த்தார். வந்த ஏழை இன்னமும் தயங்கி நின்றான். ஒரு பொட்டலம் பக்கோடாவை எடுத்து, அவன் கை தொட்டுக் கொடுத்து, உள்ளே கையைப் பிடித்து அழைத்து வந்து ஸ்டூலில் குந்தச் செய்து காப்பியும் கொடுத்து அனுப்பினார். காணாமற் போன அந்த ஏழையின் குமாரனின் விவரங்களையும் முன் போலவே வாங்கிக் கொண்டு அனுப்பினார்.

இப்போது ஐயர் நிம்மதியாகப் பெருமூச்சு விடலானார்.

முதற் பந்தி முடிந்தது,

ஐயர் எட்டிப் பார்த்தார்.

எச்சில் இலைகள் அப்படி அப்படியே இருந்தன.

“டேய் பசங்களா!” என்றார்.

ஜெயராஜ் மட்டுமே ஐயரின் பார்வையில் தென்பட்டான். அடுத்து உமைபாலனும் ஓடிவந்தான்.

“இலைகளை எடுங்கடா!” என்று பணித்தார் அவர்.