பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

மாஸ்டர் உமைபாலன்



அப்போது “அடகடவுளே!” என்று விம்மியபடி அங்கே தோன்றிய காரைக்கால் செங்காளியப்பன், அந்த எச்சில் இலையைப் பிடுங்கி மடித்து, அதை எச்சில் இலைத் தொட்டியில் போட்டுவிட்டு அந்த மேல் வரிசை இலைகளையும் எடுத்து கத்தம் செய்யலானார்

உமைபாலனைப் பேய் அறைந்துவிட்டதா என்ன?

5

ஆம்; உமைபாலன் பேயறை பட்டவனாக வாய்ச் சொல் ஏதுமின்றி, வாய்ச் சொல்லுக்கு ஏது எதுவுமின்றி அப்படியே நிலைகலங்கி நின்று விட்டான்!

உமைபாலன் தன் கடமையின் பேரில் அந்த எச்சில் இலைகளை எடுத்துத் துப்புரவு செய்ய வேண்டியிருக்க, அவனுக்குப் பதிலாக, அந்தப் பணக்காரப் பெரிய மனிதர் அந்த எச்சில் இலைகளை அவ்வளவு அவசரமாக எடுத்துப் போட்டுச் சுத்தம் செய்த நிகழ்வு அங்கே ஒரு பெரும் பரபரப்பையும் அதிசயத்தையும் விளைவித்தது.

இச் செய்தியைச் சரக்கு மாஸ்டரும் சர்வர் மணியும் சொல்லக் கேட்டு, வேகமாக வந்தார் பெரிய ஐயர். தற்செயலாக, கோபுவும் வந்துவிட்டான்.

அற்பம் என எண்ணப்படும் சிறிய சம்பவம், ஒருவனது வாழ்க்கையில் மகத்தான திருப்பத்தை உண்டாக்கக்கூடும். இதற்கு உதாரணமாக, எத்தனையோ பெரிய மனிதர்களின் வாழ்வு ஏடுகளிலே இடம் பெறவில்லையா?

இதை மனத்தில் கொண்டு, அச்சிறுவனையும் அப்பெரியவரையும் மாறி மாறிப் பார்த்தான் கோபு. ‘சரிதான்; இந்தச் சீமானுக்குப் பிள்ளை இருக்காது. துடியான களை சொட்டும் நம்ம உமைபாலனை சுவீகாரம் எடுத்துக்கப் போறார் போலிருக்கு!’ என்ற முடிவுதான் அவன் நெஞ்சில் மேலோங்கியிருந்தது.