பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

மாஸ்டர் உமைபாலன்



கனபாடி கங்காதரம் பாசத்தின் அற்புதம் அறிந்தவராக, உணர்ந்து, மனம்விட்டுப் பேசினார்.

காரைக்கால் நபர் விடைபெறும் பொழுது, நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து ஐயரிடம் நீட்டினார். “என் உயிர் இங்கேயேதானுங்க இருக்கும்!. இதை வச்சக்கங்க!..”

ஒட்டல் உரிமையாளர் ஏற்க மறத்துவிட்டார். “உம் பையன் இனி எம் பையனாட்டம் பணத்தை நீங்களே வச்சுக்கங்க.. பத்திரம். நிம்மதியாய்ப்போயிட்டு வாங்கோ...”என்று வழியனுப்பி வைத்தார்.

அன்றிரவு எல்லோரும் உறங்கி விட்டார்கள்.

ஆனால் சிறுவன் உமைபாலன் மட்டும் சிலை போல் உட்கார்ந்திருந்தான். சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, நேருஜி போன்ற மனிதத் தெய்வங்களின் முன்னே மண்டியிட்டு வணங்கிக் கண்ணீர் சொரிந்துகொண்டிருந்தான்!

தரையிலே விரிந்து கிடந்த பத்திரிகை விளம்பரத்தில் அச்சிடப்பட்டிருந்த சிறுவன் கருணாகரனின் கிறுக்கப்பட்ட முகத்திலே, உமைபாலனின் கண்ணீர்த்துளிகள் சிதறிச் சிந்தின!...

6

காலை இளங்காற்றிலே பறந்த அந்த அழகிய பட்டம் காற்றை எதிர்த்து மேலே விண்ணிலே செல்ல எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. கீழே மண்ணை நோக்கிச் சாய ஆரம்பித்தது.

ஓட்டல் ஆரம்பமாகி மூன்று மணி நேரமாகியுங்கூட, இன்னமும் ஜெயராஜ் திரும்பாதது கண்டு, ஒட்டல் முதலாளி மகன் கோபுவுக்கு ஐயம் தட்டத் தொடங்கியது. பெரியவர் மாதிரியே அவனுக்கும் சந்தேகம் ஏற்பட்டது.