பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

மாஸ்டர் உமைபாலன்



ஒரு முகமூடி காணப்பட்டது.

அடியில் ஒரு சீசா இருந்தது. மூடியைத் திறந்தார். ‘குப்’ பென்று அடித்தது வாசனை - நாற்றம்! அதில் இருந்த எழுத்துகளைப் படித்தார். ஏதோ ஒரு வகை பிராந்தி வைக்கப்பட்டிருந்த வெறும் சீசா போலும் “சே, சுத்த ரெளடிப்பயல்...காலிப்பயல்!’ அவரது பற்கள் சத்தம் பரப்பின. 'இவனுக்கு இந்தச் சனியன் எல்லாம் ஏது?...நம்ம கடைப் பேரையே கெடுத்துடுவான் போலிருக்கே!' என்று வருந்தினார்.

உள்ளே எட்டிப் பார்த்துத் தலையை நீட்டிய அப்துல்லாவுக்கு நல்ல அடி கிடைத்தது.

உமைபாலன் வெளியே தன் கடமைகளை ஆற்றிக் கொண்டி ருந்தான்.

இன்னமும் பிரித்தார் பெரியவர். சிகரட்டுகள் சில கிடந்தன. கிழிக்கப்பட்டுப் பெட்டிக்கடியில் போடப்பட்டிருந்த நோட்டுத் தாள்களை எடுத்தபோது, ஒன்றில் 'எஸ். காத்தான்' என்ற பெயர் இருந்தது. காத்தான்!...

சடக்கென்று ஐயர் குடுமியைத் தட்டி முடிந்தார். சாம்பான் கிழவன் சொன்ன பேர் காத்தான் என்பதுதானே... ஒரு வேளை இவன் அவனோட மகனாயிருக்குமோ? ...பேரையும் ஜாதியையும் மாற்றிக்கிட்டு வேஷம் போட்டிருப்பானோ? சே! எனக்கு மண்டைன்னா கனக்குது!... பாலன், அப்துல்லாதான் நல்ல பையன். எதையும் மறைக்கலே!'

கனபாடி கிளம்பினார்.

அப்துல்லாவுக்குப் புதிதாகப் போட்ட ஜாங்கிரியை எடுத்துக் கொடுத்தார். இதைத் தூரத்தேயிருந்து பார்த்துக்கொண்டிருந் தான் உமைபாலன் என்பதை உணர்ந்து, இன்னொரு ஜாங்கிரியை எடுத்து, அவனை நெருங்கி, அவனிடம் கொடுத்தார்.

உமைபாலன், “இது வேண்டாமுங்க உங்க அன்புதானுங்க வேணும்” என்று சொல்லி விட்டான்.

‘இவனைப் படிக்கிறதுக்கு எனக்கு வயசு பத்தாது போல!’ என்று எண்ணமிட்டார் கங்காதரம். .