இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பூவை எல்.ஆறுமுகம்
83
அவரவர் பலகாரங்களை உண்டனர்.
கடிகாரமோ காலத்தை உண்டது.
வெயில் எரித்தது.
அப்போது மிகவும் ‘ஸ்டைலாக’ அங்கு வந்தான் சிறுவன் ஜெயராஜ்.
உள்ளே அடியெடுத்து வைத்துதும், அவனை அழைத்து, உன் அப்பா சாம்பான் வந்திருக்காரப்பா” என்றார் கனபாடி
உடனே ஜெயராஜின் சிவந்த முகம் மாறிவிட்டது. சுதாரித்துக் கொண்டான். “என் அப்பா உயிருடன் இல்லிங்களே!” என்று பதிலளித்தான்.
“ஏய்!” என்று அதட்டியபடி அங்கு தோன்றினார் அம்மனிதர். இரவு இவனைத் தேடி வந்தாரே அவர்தான்! அவர் இப்போது போலீஸ் உடுப்புகளோடு நின்றார். அவர், அவன் கன்னங்களிலே அறைந்தார்.