பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

இளவரசி வாழ்க


 
இளவரசி வாழ்க!
1

தேமதுரத் தமிழ் வாழ்த்துகின்ற பொங்குவிரி காவிரியின் வாழ்த்தைப் பெற்றது அல்லவா சோழவள நாடு!

புலிக்கொடி வாகை சூடிக் கொடிகட்டி பறந்த சோழமண்டலத்திற்கு, அன்றைக்கு வழித்தடம் அமைத்துக் கொடுத்த முதல் மரியாதைக்குரியது சிருங்காரபுரி நாடு!..

அந்நாட்டின் பூலோக சொர்க்கமாகத் திகழ்ந்த அரண்மனையின் தலைவாசலில், வண்ணக் கலாபமயில் சின்னம் பொறித்த வெண்பட்டுக்கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது!

அப்பொழுது –

அத்தாணி மீண்டபம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. மண்டபத்தின் பிரதான வாயிலில் காவலர்கள் இருவர் கடமையின் கண்ணியத்தோடு, கட்டுப்பாடு காத்து நின்றனர். அவர்களுடைய முகங்களிலே பளிச்சிட்ட கேள்விக்குறியில் ஆச்சரியக்குறி மின்னிமின்னி மறைந்தது.