பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

இளவரசி வாழ்க



“ஐயனே மன்னருக்கு ஆண்மகவைக் கொடுத்து அருள்செய். அம்மையப்பனே” என்று நெஞ்சம் நெக்குருகப் பிரார்த்தித்தனர் காவலாளிகள்!

2

சிருங்காரபுரி நகரத்தின் முச்சந்தித் தகவல் அறிவிப்புக் கூடம் அது.

பறை ஒலி வானைப் பிளந்தது.

படைத்தலைவன் ஒருவன் தன்னுடைய நீலத்தலைப்பாகையுடன் கம்பீரமாக அழகிய குதிரையினின்றும் இறங்கினான். கையிலிருந்த ஒலைச்செய்தியைத் தயாராக எடுத்து வைத்துக் கொண்டான். ‘டம்...டம்...டமார்’ என்று பலதரப்பட்ட மேள வாத்திய ஒலிகளும் தொடர்ந்தன.

நாட்டு மக்கள் களிபேருவகையுடனும் நனிமிகு ஆர்வத்துடனும் அங்கு கூட ஆரம்பித்தனர். பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், அயலவர்கள் என்ற பாரபட்சம் ஏதுமில்லாமல் கூட்டம் நெருக்க ஆரம்பித்தது.

அப்போது, அக் கூட்டத்தில் ஒர் அங்கமாக அழகான புதிய யுவதி ஒருத்தி வந்து இணைந்தாள். வந்தவள் உண்மையிலேயே அந்நாட்டுக்குப் புதியவள் என்பது அவளது விழிப்பிலிருந்தே புரிந்துவிட்டது. உச்சி வெயிலின் வெக்கை அவளுக்குப் பிடிக்க வில்லைபோலும்!

படைத்தலைவன் அக் கூட்டத்தைக் கூர்ந்து நோட்டம் விட்டான். பிறகு, இடுப்பில் செருகியிருந்த ஒரு கருவியைக் கண்களிலே இடுக்கி, அதை ஒலைத்துணி கொண்டு லாகவமாக மறைத்தபடி கும்பலைக் கவனித்தான். அவன் முகம் ஏன் அப்படி வெளிற வேண்டும்?