பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

27


ஆனால், வந்த புகழ்நிலையை விட்டுக்கீழே இறங்கிவிடாமல் காத்துக் கொண்டிருப்பது, மிகவும் கஷ்டமான காரியமாகும். அப்படிச் செய்பவர் சாமர்த்தியசாலிகளாவார்.

வந்த புகழ் இறங்காமலும், மென்மேலும் பெருகிட வழிவகைளை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொண்டு இறுதிவரை முன்னேறிக் கொண்டிருப்பவரே அறிவாளர் - அறிஞர்கள் ஆவார்கள்.

Ο O O

பிரச்சினைகள் பெரிது அல்ல!

பிரச்சினைகளே பெரிதென்று எண்ணி எண்ணி, அவற்றையே பேசிப் பேசி, அவற்றிற்குள்ளே புதையுண்டு போகின்றவர்களே அதிகமாய் இருக்கின்றார்கள். ஆனால், பிரச்சினைகளைவிட்டு மேலேறிவந்து, முனைந்து பலகாரியங்களைச் செய்கின்றவர்களே முன்னுக்கு வருகின்றார்கள். சாதனை செய்து சரித்திரப் புகழினை அடைகின்றார்கள்.

Ο O O

மொட் டை... மனிதர்

வெட்ட வெட்டத்தழைப்பது மரத்தின் இயல்பு. வீழ வீழ முயற்சிப்பதுதான் மனிதனின் இயல்பு.