30
முடியாததற்காக முயற்சி செய்து தோற்பது கேவலமில்லை. வெற்றி வராவிட்டாலும் அனுபவமாவது கிடைக்கிறதே ஆத்ம திருப்தியாவது பெறுகிறோமே அதுவே போதும்.
Ο O O
திருப்தி தரும் தரிசனம்
எந்தக் காரியத்தையும் அந்தந்த நேரத்தில் முடித்து விடவேண்டும் என்று முனைபவருக்கும் உழைப்பவருக்கும் கஷ்டமாகத்தான் இருக்கும். சில சமயங்களில் வெறுப்பே ஏற்படுகின்ற அளவுக்கு. எரிச்சலாகக் கூடத் தெரியும். சிரமப்பட்டு அந்தக் காரியத்தை முடித்து விட்டால், அதற்குப் பிறகு ஏற்படுகின்ற இன்பமும் திருப்தியும் இருக்கிறதே அதை சொல்லி உணர முடியாது. அனுபவிக்கும் பொழுது தான் அதன் இன்பம் புரியும்.
Ο O O
காலத்தின் கோலம்
பிறரது வறுமையைப் பார்த்து விட்டு, தமது பெரிய உடைமையையும் இருக்கும் நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்து, நாம் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று திருப்தி அடைய வேண்டும் என்று நமது முன்னோர்கள் நமக்குக் கற்பித்துச் சென்றார்கள்.