பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42


நினைத்துப் பார்க்கிறேன். நல்ல வேளை பிழைத்துக் கொண்டேன் என்று பெருமூச்சு விடுகிறேன். இப்படி எத்தனையோ கொடி மனிதர்கள் இருக்கையில், மரமனிதர்கள் என்ன செய்வார்கள்? மாட்டிக் கொண்டவர்களை மீட்டுக் கொண்டுவர இறைவன் தான் உதவ வேண்டும் வேறு வழி!

Ο O O

காய்க்காத தோட்டம்

கர்வமும் பொறாமையும் நிறைந்தவர்கள் வாழ்வு எப்படி ஆகிறது தெரியுமா? நிறைய பூத்துப் பூத்து காய்க்கின்ற காலத்தில் உதிர்ந்து போகின்ற காய்க்காத தோட்டமாக ஆகிவிடுகிறது.

Ο O O

வேஷம்

நடைபாதைகள்தோறும் கோயில்கள். காண்பவர்கள் எல்லோரும் கையெடுத்து வணங்குகிறார்கள் நாட்டில் பக்தி அதிகமாகிவிட்டது என்று பார்த்தால்... எல்லாம் பகல் வேஷமாக இருக்கிறதே. எதற்கு பக்தி என்பதே புரியவில்லை... பணத்தையே தேடும் வேஷப்பக்தி... எப்படி அசைந்தாலும் எருமை யானையாகி விடுவதில்லை. பிறர் முன்னே பக்தி வேஷம் பெருமை தருவதாகவும் இல்லை.

Ο O O