பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46


பழி தீர்க்கும் ராஜபாதை

பணத்தால் பாவங்களை மறைத்து விடலாம். ஆனால் பாவங்களுக்குரிய தண்டனை வரும் பொழுது அந்த வழியை பணத்தால் மறைத்துவிட முடிவதில்லை. தடுத்திடவும் முடிவதில்லை. அந்த, வழி ராஜபாதையாகவே இருக்கிறது. காரணம்? அது தான் தர்மத்தின் வழி!

Ο O O

உடற்பயிற்சித் துறையில் இருப்பவர்கள் தொந்தியும் தொப்பையுமாய் இருக்கிறார்களே என்று என்னை பலர் கேட்கின்றார்கள். உடற். பயிற்சி செய்தால் உடல் சீராக இருக்கும், நேராக இருக்கும் என்று ஊருக்கு உபதேசம் செய்கின்றவர்கள், தாங்கள் நேராக நிற்க வேண்டும் என்பது முறை தானே! வயிற்றை வளர்த்துக் கொண்டிருப்பவர்கள் வெட்கப்பட வேண்டிய விஷயம் இது. ஏனெனில் தாங்கள் பணியாற்றும் துறையை பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றார்களே... அதற்காக!

Ο O O


இறைவனின் புன்னகை

வெற்றி என்பது உண்மையான உழைப்பின் விளைச்சல். உள்ளிருந்து ஊக்குவித்த இறைவனின் புன்னகை அது.

Ο O O