பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57


ஒட்டைப் படகு

சுழித்து வரும் வெள்ளத்தின் மீது மிதந்து கொண்டு, பழித்தபடி துணிச்சலாகப் பயணம் போக உதவுவது நல்ல படகுதானே! ஒட்டைப்படகாக இருந்தால் ஊர்போய்ச் சேரமுடியுமா? துன்ப வெள்ளங்கள் கரைபுரண்டோடும் நமது வாழ்க்கையிலே, ஒட்டைப் படகுபோல நோஞ்சா உடம்பும், அதற்குள்ளே ஒடிங்கிக்கிடக்கும் மனமும் இருந்தால், துணிவான பயணம், கனிவான பயணம் எப்படி முடியும்?

Ο O O

சாதிப்பது எப்படி?

மனதை அதைரியப்படுத்தி, தளர்ச்சியடையச் செய்கின்ற நிகழ்ச்சிகள் தான் வாழ்க்கையில் நிறைய நடக்கின்றன. எப்பொழுதோ ஒருமுறை தான் நினைப்பது போல் நடந்து நெஞ்சை மகிழ்விக்கிறது. இந்த ஒரு மகிழ்ச்சியை வைத்துக் கொண்டு தான் அதைரியப்படுத்தும் நிகழ்ச்சிகளை நாம் அலட்சியப்படுத்த வேண்டும். ஆட்டிப்படைக்க வேண்டும். வென்று சாதிக்க வேண்டும்.

அது தான் அறிவின் வெற்றி. வாழ்க்கையின் வெற்றியுமாகும்.

Ο O O

அ.க - 4