64
உலகக் கொடுமை
பசிக்கும் பொழுது சாப்பிட வழியில்லை. சம்பாதிக்கவும் வகையில்லை. சம்பாதிக்கும் வழி தெரிந்து, கையிலே நிறைய வசதி வந்த பிறகு பசிக்குச் சாப்பிட வழியில்லை. பல நோய்கள் தொலை. பணக்காரனாக இருந்து பசித்துக் கிடப்பதைவிட, வேறு கொடுமை இந்த உலகத்திலே இல்லைதானே!
Ο O O
முட்டாள்கள் பரவாயில்லை
மூட நம்பிக்கைகளை முட்டாள்தான் வெறியோடு பின்பற்றுகின்றார்கள் என்றெல்லாம் தாக்கிப் பேசுபவர்கள் உண்டு. மூட நம்பிக்கைகளைவிட அவற்றைப் பின்பற்றும் முட்டாள்களைத்தான் அறிவாளிகள் அதிகம் பின்பற்றுகின்றார்கள். ஏன்? மூட நம்பிக்கைகளுக்கு முன்னே, அறிவுத்தனம். அடிபட்டுப் போய்விடுகிறது. ஏன்? அதுதான் மனிதத்தனம்.
Ο O O
நம்பிக்கையான நிம்மதி
நிகழ்காலத்திலே நிம்மதி. எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை. கடவுளின்மேல் முழு நம்பிக்கை வைத்து, உண்மையாக உழைப்பவர்களுக்குக் கிடைக்கின்ற உயர்ந்த பரிசாகும்.
Ο O O