பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74



அந்தச் சேலையும்
அழகாக இருக்கிறதே !
எனக்கும் ஒரு சேலை
இப்படி இருந்தால் !
அங்க லாய்ப்பு...
ஆவித் துடிப்பு.
ஏன் இப்படி ? அது தான் மனித இனம் !

மனிதத்தனம்-3

தன்னைப் புரிந்து
தன் தகுதி தெரிந்து
இலட்சியம் அறிந்து
ஏற்றமுடன் நடந்து செல்ல
எந்த மனிதன் நினைக்கிறான்!
பிறரைப் பற்றியே பேச்சு
பிறர் வாழ்வே மூச்சு
குறை சொல்லி மகிழ்ச்சி !
நிறை தள்ளி இகழ்ச்சி !
பிறர் துயரில் கவர்ச்சி !
ஏச்சிலோ எழுச்சி;
ஏன் இப்படி ?