பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75


தான் உயர நினைக்காமல் -
தன்மையுடன் உழைக்காமல்
வீணாகிப் பேசுவதேன் !
சாணாக வளைவதேன் !
தெரிந்தும் ஏன் வதந்தி ?
தெளிய மாட்டார்கள் !
ஏன் இப்படி ?
அவர்கள் மனிதர்கள்.
அந்த மனிதத்தனம்
அவர்களை விடவே விடாது!


மனிதத்தனம்-4

தவறு இழைப்பது
தவறெனத் தெரியும்!
தண்டனை நிச்சயம்!
தன்மையும் புரியும்!
தருமமும் பழிக்கும்!
சமுதாயம் சபிக்கும்!
மனசாட்சி உறுத்தும்!
மாபாவம் வருத்தும்!
எல்லாம் தெரியும்!
யாருக்குத் தெரியாது?