பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76



ஒவ்வொரு மனிதரும்
உணர்ந்துதான் உள்ளனர்!
பிறகிங்கே தவறுகள்
பெருகியே வழிவதேன்?
சிறகு முளைத்ததுபோல்
சிறுமைகள் பறப்பதேன்?
விறகு நெருப்பாக
வெம்மைகள் சுடுவதேன்!
கடவுளைக் காட்டியும்
கருமத்தைக் காட்டியும்
நரகத்தைக் காட்டியும்
நல்லறிவு ஊட்டியும்
ஒட்டிக்கு ரெட்டியாய்
ஓங்குதே தவறுகள்!
பகுத்தறிவின் விளைவா?
படிக்காத நலிவா!
மறுபடி மறுபடி
மனிதன் தவறுக்குள்
நீந்தியே களிக்கிறான்!
நெஞ்சையே அழிக்கிறான்!
ஏன்?
அபராதம் கடுஞ்சிறை