பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79



அடுத்தவரை சீண்டுவதில்
அடைகின்ற அற்ப சுகம்!
அடுத்தவரைப் பழிப்பதிலே
அடைகின்ற மன அமைதி!
அடுத்தவரின் துன்பத்திலே
அழைக்கின்ற மனநிறைவு !
கெடுமதியும் கீழ்ச்செயலும்
கேளிக்கை ஆகிறதே !
பிறர் வாழ்வை நினைத்தபடி,
பிறர் செயலை முறித்தபடி
பேரின்பம் காண்பதற்கோ
பெற்றோமா பகுத்தறிவை !
நல்ல செயல் புண்ணியங்கள்
நல்ல மொழி கண்ணியங்கள்
தானம் தருமமென்று
தாராள வாய்ப்பந்தல் !
ஆனாலும் அக்ரமங்கள்
அடுத்தடுத்து நிகழ்வதும் ஏன்?
மாறாத மனிதத்தனம்
மண்டியிடக் காண்கிறோமே !
முரண்பாட்டின் மறு பெயரே
மனிதத்தனம் ஆகிறதோ!
எதற்கெடுத்தாலும்
என்னால் முடியாது?