பக்கம்:அனுபவக் களஞ்சியம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் தமிழ் இலக்கியத்தில் விளையாட்டுத்துறை அதிகமாக வெளிவர வேண்டும் என்ற முயற்சியில், இதுவரை 80க்கும் மேற்பட்ட துறை நூல்களையும், 20க்கும் மேற்பட்ட நாடக நூல்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். இவர் எழுதிய ‘ஒலிம்பிக் பந்தயத்தின் கதை’ எனும் நூல் 1977ம் ஆண்டும், ‘விளையாட்டுக்களின் கதைகள்’ எனும் நூல் 1981ம் ஆண்டும், “விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்” எனும் நூல் 1984ம் ஆண்டும் தேசிய விருதினை பெற்று இருக்கின்றன.

தமிழிலும், உடற்கல்வித் துறையிலும், முதுகலைப் பட்டமும், டாக்டர் பட்டமும் (M.A., M.P.Ed. Ph.D.) பெற்றுள்ள ஆசிரியர், வானொலி டெலிவிஷன், வாரப் பத்திரிகைகளில் தொடர்ந்து விளையாட்டுத்துறை பற்றி பேசியும் எழுதியும் வருகிறார்.

தமிழில் முதன்முறையாக “விளையாட்டுக்களஞ்சியம்” என்னும் விளையாட்டுத்துறை மாத இதழை 1977 ஆம் ஆண்டிலிருந்து தொடந்து நடத்தி பணியாற்றி வருகிறார்.


Printed at: Grace Printers, Madras - 33