பக்கம்:அனுமார் அனுபூதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25, களத்தில் இளையவன் மூர்ச்சித்தான் ராமன் அதிர்ந்தான் மருந்தாக சஞ்சீவியை குன்றோடு கொண்டு வந்தவனே கவிகுல திலகமே கருணை மறவனே ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


26. அடைக்கலம் கேட்ட வீடணனை அனைவரும் மறுத்தார் அவன் ஒருவனே அண்ணனிடம் நீதிகேட்டான் அவன் மகளே அன்னைக்கு துணை நின்றாள் என எடுத்துறைத்த நடுநாயகமே ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


27. இம்மைக்கும் மறுமைக்கும் நீயே கதி செம்மைக்கும் செழுமைக்கும் நீயே கவசம் உண்மைக்கும் நன்மைக்கும் உறவான தெய்வமே ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே