பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழக்கும் மேற்கும் 153 இழிவுபடுத்திக்கொள்கிருேம்: அன்றியும் அது நன்மையை விடத் ാലേ அதிகம் செய்யும். - ஐரோப்பியப் பண்பாட்டில் நமக்கு எழுகின்ற எதிர்ச் செயல் இதன் மூலமாக எற்பட்டதுதான். கம்முள் புதிதாகத் தோன்றிய க்யகெளரவம் கமக்குள்ளேயே நாம் அடங்கி விடுமாறு, கம்மைத் தூண்டுகிறது. - இந்தியா என்ற நாட்டில், காலம் என்று சொல்லப்படும் ஒன்று வரைந்து வருகின்ற வரலாற்று ஏட்டில், இந்த வெறுப் புணர்ச்சி மிகவும் தேவைப்படுகிற தென்பதை முன்னமேயே கடறியுள்ளேன். எதிர்த்துக் கேள்வி கேட்காமல், நம்முடைய மன வறுமையின் காரணமாக, மேலே நாடுகளிலிருந்து பெற்று வந்த பொருள்கள் கம்முடையனவாக ஆக முடியாது. ஏனென்ருல் அவற்றின் உண்மை யான மதிப்பை நாம் அறியாமையாலும் அவற்றைக் காட்சிப் பொருள்களாகப் பயன்படுத்தத் தொடங்கியமையாலும் அவை நம் முடையனவாக் ஆகவில்லை. இதனை நாம் அறிந்துகொண்டவுடன், இதில் ஒரு மாற்றம் வேண்டுமென்று விரும்புவது கியாயமானதே. ஐரோப்பாவின் குறிக்கோள்களே யெல்லாம் ராஜாராம் மோகன் ராய் முழுவதும் ஜீரணம் செய்ய முடிந்தது. ஏனென்ருல் அவற்றைக் கண்டு அவர் மயங்கிவிட வில்லை. அவரைப் பொறுத்தமட்டில் அவற்றுக்குப் பணிந்து போகின்ற நிலைமையும் இல்லை. அவருடைய சொங்த நாட்டின் பண்பாட்டில் வேரூன்றி யிருந்த காரணத்தால் பிரிட்டிஷாரிடமிருந்து பெறப்பட்ட பொருள்களே மதிப்பிட்டுப் பெறு வதற்குரிய அளவுகோல் அவரிடம் அமைந்திருந்தது. நவீன இந்தியாவின் முதல் கலைஞராகிய அவரிடம் இயல்பாகவே அமைக் திருந்த இந்தச் சக்தியை, இன்று காம் கம்முடைய முரண்பட்ட கருத்துக்கள், செயல்கள், எதிர்த் தாக்குதல்கள் ஆகியவற்றி னிடையே கூட. வளர்த்து வருகின்ருேம். ஆதலால்தான் ஒரு அ.நேத்திலிருந்து மற்ருெரு அதீதத்திற்கு காம் செல்ல வேண்டி யிருக்கிறது. இதன் பயணுக மிக விருப்பத்தோடு ஒரு முறை ஏற்றுக்கொள்வதும். வேண்டா வெறுப்பாக ஒரு முறை ஒதுக்கு வதும் செய்து, நம்மையும் அறியாமல் குருட்டுத்தனமாக முன்னேறி வருகின்ருேம். - பிரிட்டிஷாருக்கும், இந்தியர்களுக்கு மிடையே இருக்கின்ற பல்வேறு மனவிறைப்புக்களுள் உணர்ச்சியில் ஏற்பட்ட எதிர்த் தாக்குதிலே முக்கியமானதாகும். பிரிட்டிஷாருடைய உயர்ந்த