பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 60 அனைத்துலக ம்னிதனை நோக்கி இணைத்துச் சக்கரவர்த்தியின் கீழ்க் கொண்டுவந்து ஒரு மிகப் பெரிய பேரரசாக விளங்க வேண்டுமென்று ஓயாது நினைந்து வருகிறது. ஆனல் இங்கிலாந்தில் சமீபத்தில் கூடிய வல்லரசு மாநாட்டில்’ எல்லா இனங்களேயும் ஒன்ருக்க வேண்டுமென்ற பேச்சு அடிபட்டுப் போய்விட்டது. டொமினியன் சுயாட்சியில் கைவைக் கப்படுவதை அவர்கள் மிகவும் வெறுப்பதாகத் தெரிகிறது. நெருங்கிய உறவில்தான் வலிமை இருக்கிற தென்பதையும் அளவால் பெருகி இருப்பதுதான் பெருமை யடைவதற்குரிய வழி என்பதையும் தற்காலத்தில் யாரும் நம்புவதாகத் தெரியவில்லை. இதில் அடிப்படையான உண்மை என்னவென்ருல், பிரிவு மனப் பான்மை வலுப் பெற்றிருக்கிற இடங்களில், பெரியதொரு யூனிட்டை உண்டாக்கவேண்டு மென்பதற்காகக் குருட்டுத்தன மாகச் செய்யப்படுகின்ற முயற்சிகள், உண்மையோடு மாறுபடு: கின்ற காரணத்தால் நடைமுறையில் எடுபடுவதில்லை. மறைந்து கிடக்கின்ற பிரிவு மனப்பான்மை திடீரென்று வெடிக்கக்கூடிய ஒரு சக்தியாகும். என்ருவது ஒருநாள் அழுத்தங் காரணமாகத் திடீ ரென்று வெடித்து அது பெருங் குழப்பத்தை உண்டாக்கலாம். ஒற்றுமைக்குச் சிறந்த வழி என்னவென்ருல் உண்மையில் பிரிந்து நிற்பதை ஏற்றுக்கொண்டு அதற்கு மரியாதை செலுத்துவதே யாகும. - எப்போது மனிதன் தனது தனித் தன்மையை உணர்கின்ருனே, அப்போதுதான் பெருமை அடையவேண்டு மென்பதையும் அவன் உணர்வான். இந்த உணர்ச்சி யில்லாவிட்டால் கூட்டத்தில் ஒரு வனுகக் கலந்து விடுகிருன். உறங்கும்பொழுது மனிதர்களுக்குள் வேறுபாடு காணப்படுவதில்லை யென்ருலும், அவர்கள் எழுந்த வுடன், ஒவ்வொருவருடைய அடையாளங்களும் பல்வேறு வழி களில் வெளிப்படுகின்றன. வளர்ச்சி என்பதே, ஒற்றுமையிலுள்ள வேற்றுமை விரிவடைவதுதான். விதையில் வேற்றுமை இல்லை. மொக்காக இருக்கும்பொழுதும் இதழ்கள் அனேத்தும் ஒன்ருக மூடப்பெற்றுள்ளன. இந்த இதழ்கள் ஒன்றிலிருந்து ஒன்று விடுபட்டு விரியும்பொழுதுதான் மொக்கு விரிங் து அடைகிறது. ஒவ்வொரு இதழும் பல்வேறு துறைகளில் தத்தமக் குரிய வேலையைச் செய்து முடிக்கும்பொழுது மலர் தன்னுடைய கடமையை முடித்துவிடுகின்றது. இன்று பல்வேறு மக்களும் ஒருவரோ டொருவர் தொடர்பு கொள்கின்ற காரணத்தால் உலகம் முழுவதிலும் ஒரு வகையான கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வளர்ச்சிக்