பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2:05 அனைத்துலக மனிதனே நோக்கி களிடம் சொல்வோமேயானுல் உடனே கோபத்தால் அவர்கள் கண்கள் சிவந்து, நம்மைச் சமுதாயப் பிரஷ்டம் செய்வதற்கு ஆணே இட்டு விடுவார்கள். அரசியல் ஆகாயத்தில் பறப்பதற்கு இறக்கையை அடித்துக் கொள்கிற மக்கள் அனவரும், *(EP受5T山s கிளேயில் வலுவாகத் தங்கள் கால்களே ஊன்றி வைத்துக் கொள் கிருர்கள். w - இந்தப் பிரச்னையின் இருதய ஸ்தானம் எது என்பதை நாடு அறிய வேண்டும். படகை இடப் புறம் திருப்புவதாயினும், வலப் புறம் திருப்புவதாயினும் |37 சுக்கானேயே உபயோகிப்பது போல, அரசியல் பகுதியாயினும் சரி, சமுதாயப் பகுதியாயினும் சரி இவை யிரண்டிலும் ஒரு மனிதன் உண்மையோடு இருக்க' வேண்டுமேயானல் ஒரு முக்கியமான கொள்கையில் அவன் தலைமை பெற்றிருக்க வேண்டும். சித்பூர் சாலைக்கும், செளரங்கிக்கு முள்ள வேற்றுமை, இந்தக் கொள்கையினிடத்து அவர்கள் இரு வரும் காட்டுகின்ற மதிப்பையே பொறுத்திருக்கிறது. சித்பூர் சாலை, அனைத்துமே மேல் அதிகாரிகள் கையில் இருக்கிறதென்ற முடிவுக்கு வந்து, தன்னுடைய கடமை ஒன்றையுஞ் செய்யாமல், மல்லாந்து படுத்து உறங்குவதுதான் முறை என்ற முடிவுக்கு வந்து விட்டது. செளரங்கியில் வாழ்பவர்கள், தங்களோடு தொடர் புடைய பொருள்கள் எதுவாயினும் அதைப்பற்றிப் பேசவும் அதில் தலையிடவும் தங்களுக்கு உரிமை உண்டென்ற கொள்கையை மேற்கொண்டுள்ளனர். அதிகாரிகளுக்கும், தங்களுக்கும் வலிமை யான ஒரு தொடர்பு இருக்கிறதென்று செளரங்கிப் பகுதியினர் நம்புவதால், அந்த நம்பிக்கையின் காரணமாக உலகத்தையே தம் அதிகாரத்துள் வைத்திருக்கின்றனர். இந்த நம்பிக்கை யில்லாத காரணத்தால்தான், சித்பூர் சாலேப் பகுதி, உலகத்தைத் தன் பிடி மானத்திலிருந்து விட்டுவிட்டுக் கண்களைப் பரக்க விழித்துக் கொண்டு, மல்லாந்து படுத்துக் கிடக்கிறது. நம்முடைய வீட்டில் செய்யப்பெற்ற மிகக் குறுகிய சட்டங் களே மிக உயர்ந்தவைகள் என்று கினைத்துக்கொள்ள வேண்டு மானுல் நம்முடைய கண்களே மூடிக் கொள்ள வேண்டும். கண் களேத் திறந்து பார்க்கும் பொழுது உலகம் முழுவதும் ஒரு பெருங் கொள்கை வியாபித்திருக்கக் காண்போம். அந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்வதன் மூலமே அதிகாரம், செல்வம், இன்பம், ஆகிய வற்றைப் பெற முடியும். ஒரு தனிப்பட்ட மனிதன் வெற்றி பெறு வதற்கு, அனைத்துலகமும் சேர்ந்து அவனுக்கு அதனை வழங்க