பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208, அனைத்துலக மனிதனை நோக்கி அச்சம் சொல்லிக் கொண்டிருக்கிறது. நம்மை ஆள்கின்றவர்கள் கூட, அவர்களுடைய அரசியல் ஆட்சித் துறையில் அச்சம் என்ற பொருள் புகுந்துவிடும்பொழுது, ஒரு விநாடி நேரத்தில் தங்கள் மேனுட்டுக் கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டுவிடு வதைக் கண்டித்திருக்கிறேன். அவர்களுடைய அதிகாரத்தில் ஆணிவேராகவுள்ள மாற்ற முடியாத சட்டத்தைக்கூடக் குருட்டுத் தனமாக அவர்கள் உடைத் தெறிகிருர்கள். அந்த கிலேயில் நியாயத் தின் மேலிருந்த நம்பிக்கைகட்டத் தளர்ந்து, அவர்களுடைய அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதையே முக்கியமாகக் கருது கிருர்கள். அனைத் துலகச் சட்டத்தில் உள்ள கம்பிக்கையை இழந்து, ஒருவனுடைய தனிப்பட்ட அதிகாரத்தை மட்டும் நம்பி வாழ் வதாகும் இது. அற்பத்தனமான அச்சம், அற்பத்தனமான பேராசை, அல்லது ஒருவன் செய்ய வேண்டிய காரியங்களே எளிதாக்குவதற் காகச் செய்யப்படும் அற்பத் தந்திரங்கள் ஆகியவற்றிலிருந்து இவை தோன்றுகின்றன. குருட்டுத்தனமான அச்சத்தால் தூண்டப்பட்டு மிக அடிப்படையானதாகிய நம்முடைய ஆண்மை யைக்ககூடப் பலியிட்டு, இந்தப் பூமியில் உள்ளதும் இல்லாதது மாகிய அனைத்திற்கும் வணக்கம் செலுத்திக் கீழ்ப்படியத் தயாராக இருக்கிருேம். சேதன ரசாயனத்தை அல்லது அசேதன ரசா யனத்தை கற்ருலும், வரலாறு, அரசியல் ஆகியவற்றைக் கற்ருலும், தேர்வுகளில் தேறினலுங்கட்ட, தலைவன் விருப்பமே நடைபெறும் என்ற அற்பமான அறிவை மட்டும் நம்முடைய மனத்திலிருந்து போக்க முடியவில்லை. , - - அதிருஷ்டவசமாகத் தற்காலத்தில் நம்முடைய நாட்டில் பொது முயற்சியான பல பணிகளுக்கு அஸ்திவாரம் போடப்பெற்றுள்ளது. - ஆளுல் நம்முடைய பழங் கால வாழ்க்கையின் காரணமாக இந்தப் பொதுப் பணிகளைத் தனிப்பட்டவர்கள் தேவையாக மாற்றிக் கொள்ளப் பெரு முயற்சிகள் நடைபெறுகின்றன. எங்கோ ஓர் இடத்திலிருந்து என்ன காரணத்திற்கு என்று சொல்ல முடியாத வகையில் ஒரு தலைவர் தம் தலையை ஆட்டுகிருர். உடனே அந்த ஒரு தலே அசைப்பிற்காக ஒரு கூட்டத்திலுள்ள தனிப்பட்டவர்கள் அனேவரும் எழுந்து, உட்கார்ந்து, மனம் செய்து, சாகிரும்கள். இறந்த பிறகு கூட, அந்தத் தலைவ்ரின் விருப்பத்திற் கிணங்க அவர் களுடைய பிரச்னைகள் எதுவாக இருப்பினும், அவை புண்ணியச் செயல்களா, பாவச் செயல்களா என்பதையும் இந்தத் தலைவரே கவனிக்கிறர். குளிப்பதற்குத் தேவையான கிணறு தோண்டப்