பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியின் பேதமின்மை 27 துலகச் சட்டம் இயல்பாகவே தம்முள் அமைந்துள்ளது என்பதை அறியும் பொழுதுதான் மனிதர்கள் தங்கள் சக்தியில் நம்பிக்கை வைக்க முடியும். எதிர்பாரா அதிர்ஷ்டத்தை நம்பிக்கொண்டிருக் கிறவர்கள் சுய நம்பிக்கையை இழந்து விடுகின்றனர் ; எப்பொழு தும் பிறரை கம்பி வாழவே விரும்புகின்றனர். தங்களுடைய அறிவையே கம்பாததால், ஏன் என்று கேட்கும் தன்மையை விட்டுவிட்டு, ஆராயும் பழக்கத்தையும் இழந்து விடுகின்றனர். தங்கட்குப் புறத்தே ஒரு தலைவர் வேண்டும் என்று தேடி அலேகின்ற அவர்கள், போலீஸ்காரன் முதல் ஒரு கொசு வரை யாரா யிருந்தா ஆம், அல்லது எதுவாக இருப்பினும் அவற்றினுடைய சக்தியை ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளனர். அறிவுக் கோழைத்தனமே வலிமைக் குறைவின் இருப்பிடம். - மேடுைகளில் அரசியல் சுய ஆட்சி முறை எவ்வளவு காலமாக வளரத் தொடங்கியுள்ளது? மற்ருெரு வகையாகக் கூற வேண்டு மானுல் காட்டின் சட்டங்கள், ஒரு தனிப்பட்ட மனிதனின் அல்லது சமுதாயத்தின் விருப்பு வெறுப்புக் குட்பட்டவையல்ல, அவை எல்லா மக்களுடைய விருப்பத்தையும் பொறுத்தே உள்ளன என்ற உண்மையை அவர்கள் எவ்வளவு காலமாக அறிக் துள்ளனர்? தனிப்பட்ட மனிதனின் விருப்பத்திற்காக இயற்கைச் கட்டங்கள் மாற்றப்பெற முடியாதவை என்றும், அவன் விருப்பப்படி அவற்றைத் தலை கீழாக மாற்ற முடியாதென்றும் கூறி அவர்கள் மனத்திலிருந்த அச்சத்தை விஞ்ஞானம் போக்கிய பிறகுதான் இது ங்டைபெற்றது. ஆண்டவன், அவனுடைய ராஜ்யமாகிய இந்த அண்டத்துள், அனைத் துலகச் சட்டங்களே நாம் அறிந்துகொள்ளும்படி வைத் துள்ளதே அவன் நமக் களித்துள்ள சுயராஜ்யமாகும். அவனுடைய சூரியன், சந்திரன், விண்மீன்கள், கோள்கள் ஆகியவற்றின் மேல் ஆண்டவன் எழுதி வைத்துள்ள செய்தி வருமாறு. சடப் பொருள்களில் நான் இல்லாமலும் நீங்கள் வாழன் மாகலின், இந்தச சடப் பொருள்களில் மறைந்து கொள்கிறேன். இங்கு ஒருபுறம் அண்டத்தின் சட்டமும் மாபாத்தில் உங்கள் மனத்தினுடைய சட்டமும் உள்ளன. இவை இரண்டையும் ஒற்றுமைப்படுத்து வதன் மூலம் நீங்கள் பெரிய சிறப்புக்களைப் பெற்று எனது ராஜ்ய மாகிய இந்த அண்டத்தைப் பெறலாம். வெற்றி பெறுவதற்குரிய கருவியை உங்களிடம் தருகிறேன். அதனைப் பயன்படுத்தி வெற்றி பெறுங்கள் *. ஆண்டவனல் அளிக்கப்பெற்ற இந்தச் சுய