பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 அனைத்துலக மனிதனை நோக்கி பிரிவினையை எதிர்த்துப் போராட ஏற்பட்ட இயக்கத்,ை அடுத்துத் தோன்றிய இயக்கம் அளவாற் பெரியதாய் இந்தியா முழுவதும் பரவி விட்டுள்ளது. பழைய நிலமையில், கம்முடைய அரசியல் தலைவர்களின் முன்ளுேக்கம் ஆங்கிலம் கற்ற கூட்டத் தாருக்கு அப்பால் சென்றதில்ல்ே , அவர்கள் மட்டுமே சிந்திக்கக் கூடிய தகுதி பெற்றிருந்தார்கள். ஆங்கில மொழியில் தோன் நிய ஆவியில் புறப்பட்ட கானல் நீராகவே நாடு இருந்து வந்தது. இந்தக் கானல் நீரில் பர்க் , கிளாட்ஸ்டன்’ மாஜினி' கரிபால்டி இவர்களின் மெல்லிய கிழ்ல்கள் காணப்பெற்றன. தியாக உணர்ச்சி எதுவுமோ, பொதுமக்களிடம் காட்ட வேண்டிய உண்மையான கருணே எதுவுமோ அங்குக் காணப்படவில்:ல. பிறகு மிக இக்கட்டான சந்தர்ப்பத்தில் இந்தியாவின் கோடிக் கணக் கான அனுதைகளின் சார்பாக, அவர்களைப் போலவே அரை ஆடை பூண்டு, அவர்களிடம் அவர்கள் மொழியிலேயே பேசிக் கொண்டு மகாத்மா காந்தி வந்து கின்ருர். அச்சடித்த புத்தகங் களிற் படிக்கின்ற கதையன்று இது உண்மையாக நடைபெற்ற நிகழ்ச்சியாகும். இதல்ைதான் அவரை மகாத்மா-பெரிய ஆன்மா. என்று பொருத்தமாக அழைக்கின்றனர். தன்னுடைய குருதியின் குருதியாக, சதையின் சதையாக இந்தியாவின் கோடிக் கணக் கான மக்களை வேறு யார்தான் முழு மனத்துடன் ஏற்றுக் கொண் டுள்ளார்கள்? சத்தியத்தின் ஒளி பட்டவுடன் ஆன்மாவில் அடங்கி இருந்த பெருஞ் சக்தி விடுதலே பெற்று வெளிப்பட்டது. அன்பு வந்து நின்று தட்டியவுடன் இந்தியாவின் கதவுகள் திறந்து கொண்டன. அக முகமாக இருந்த கஞ்சத்தனம் மறைந்தது. சத்தியம் சத்தியத்தைத் தட்டி எழுப்பியது. அரசியலில், தந்திரத்தைக் கைக் கொள்வது, பயன் தராக் கொள்கையாகும். அந்தப் பாடத்தைததான் நாம் அவசியம் கற்றுக் GBre ៤ eિtwarts இருக்தது. சத்தியத்தின் சக்தியை காம் உணரு மாறு செய்த மகாத்மாவுக்கு எல்லாப் பெருமையும் உண்டாவதாக, ஆனல் கோழையும், பலமற்றவனுமே அற்பத் தந்திரங்கட்கு ஆட்படுவான். தம்முடைய அரசியல் சூதாட்டத்தில் முறைமுகமாக மகாத்மாவைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை இன்றுங் கூட, உலகியல் அறிவு மட்டும் கொண்ட கம்மில் சிலர் விட்டு விட்ட தாகத் தெரியவில்லை. மக்களின் உள்ளத்தில் மகாத்மாவின் தூய அன்பு எழுப்பியுள்ள பேரன்பின் அர்த்தத்தை அசத்தியத்தால் அறிய முடியாது.