பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 அனைத்துலக மனிதன்ை நோக்கி கொடுத்த கோட்டையாகும். கிலாபத் இயக்கம், அல்லது சந்தர்ப்ப வசமான உடன்படிக்கைகள் ஆகியவற்றின் மூலம் ஏற்பட்ட புற ஒற்றுமை எதுவும் இந்தக் கோட்டையை அழித்துவிட முடியாது. ஆழத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதால் இத்தயை பிரச்னைகளே எளிதில் தீர்க்க முடியாது. இவற்றின் வேர்கள் நம்முடைய மனத் தில் ஆழத்தில் பதிந்திருப்பதால், அவற்றைப் பிடுங்கி எறியும் எந்தத் தீர்மானத்தையும் நாம் ஏற்றுக் கொள்ள இயல்வதில்லை. . ஆகவே, புறத்தே மட்டும் உள்ள எளிய தீர்வு ஏதேனும் வந்தால் நாம் ஆசீர் வாதம் பெற்றதுபோல மகிழ்ச்சி யடைகிருேம். பலரும் சென்ற வழியிற் சென்று வாழ்க்கை வசதியைச் சம்பாதிக்க விரும்பாதவன் தான், திடீரென்று பணக்காரளுவதற்காக, சூதாட்டத்தில் பெரும் பந்தயம் கட்டி ஆடி விடுவான். சுயராஜ்யம் அடைவதற்கு சர்க்கா தான் சிறந்த வழி என்பதை நம் நாட்டவர்கள் நம்புவார்களே யானுல், அவர்களுடைய கருத்துப்படி சுயராஜ்யம் என்பது அடைய வேண்டிய ஒன்று என்பதை நம் நாட்டவர்கள் நம்புவார் களேயானல், அவர்களுடைய கருத்துப்படி, சுயராஜ்யம் என்பது புறத்தே அடைய வேண்டிய ஒன்று என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஆகவே நம் குணதிசயங்களிலும், சமுதாய வழக்கங் களிலும் உள்ள குறைபாடுகள் நாட்டின் முன்னேற்றத்துக்கு உண் மையான முட்டுக் கட்டைகளாக இருக்க, அவற்றை மூடி மறைத்து விட்டு வீட்டில் நூல் நூற்பதில் மட்டும் கவனம் செலுத்தினுல் அதில் ஆச்சரியந் தோன்ருமல், குறை தீர்ந்த உணர்ச்சியே தோன்றுகிறது. நம்முடைய விவசாயிகள் ஓய்வு நேரங்களைப் பயனுள்ள வழி களிற் செலவழிக்கத் தொடங்கியவுடன் சுயராஜ்யத்திற்குள்ள பல முட்டுக் கட்டைகளில் ஒன்றைப் போக்கிவிடலாம் என்பதை நாம் ஏற்றுக் கொள்வோமாக. அந்த கிலேயில் அகத ஓய்வு நோக்கை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி நம் தலைவர்கள் ஆலோசிக்க வேண்டும். அந்த வழிகளைப் பற்றி ஆா: பொழுது விவசாயத்தையே இன்னும் தீவிரமாகச் செய்தால் நல்ல தல்லவா என்பதையும் ஆராய வேண்டும். நான் வறுமையில் வாடுவதாக வைத்துக்கொள்வோம். கல்ல முறையில் என் நலம் நாடும் ஒருவர் எனக்கு உபதேசஞ் செய்யத் தொடங்கும்பொழுது நீண்ட நாட்களாக நான் இலக்கிய உலகில் தொடர்பு கொண்டிருப்பதைக் கவனத்தில் வைத்துக்கொண்டு ஆத. வரை கூற வேண்டும். என் நலம் காடும் அவர் எவ்வளவுதான் இலக்