பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 அனைத்துலக மனிதனே நோக்கி: வீட்டில் நூற்கப்படும் நூல் வடிவாகவே சுயராஜ்யம் நமக்கு வருகிறதென்ருல், அதுவும் முன்னே கூறியபடி சகிக்க முடியாத தாகிவிடும். மகாத்மா காந்தியைப் போன்ற ஒருவர், அவருடைய தனிப்பட்ட சிறப்பில் மக்கள் எல்லையற்ற நம்பிக்கை கொண்டுள்ள காரணத்தால், நம்முடைய காட்டு மக்களில் ஒரு சிலரை இந்தக் சுவை யற்ற கிலேமையை ஒப்புக் கொள்ளுமாறு செய்ய முடியும் என்பதை ஒருவாறு ஊகிக்கலாம். அந்த கிலே என்னவென்ருல் அவருக்குக் கீழ்ப்படிவதே ஒரு பயணுகும் என்று கினைப்பதுதான். என்ருலும் என்னைப் பொறுத்தவரை இத்தகைய ஒரு மனநிலை சுய ராஜ்யம் பெறுவதற்கு ஏற்ற தன்று என்றே கருதுகிறேன். விட்டில் நூற்கும் நூலுடன் கின்று விடாமல், சுயராஜ்யத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கிலேயங்களே நாடு முழுவதிலும் நிறுவுவது அவசியமென நான் நம்புகிறேன். மக்கள் கலம் என்பது, பலவும் கூடிய ஒரு கலப்படமாகும். அவற்றுள் ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்வதால் கலன் விளையாது. சுகாதாரம், பொழுது போக்கு, உடலுக்கும் மனத்துக்கும் வேண்டிய செயல்கள் ஆகிய அனைத்தும் ஒன்ருக இணக்கப்பட்ட கூட்டுறவே அப்படத்தை முழுத்தன்மையுடைய தாக்குகிறது. முழுத் தன்மை பெற்ற அந்தச் சமுதாய நலப் படத்தை நம் கண் முன் காண விரும்பு கிருேம். எவ்வளவு தூண்டுதலையும்விட அதிகமாக அது நமக்கு அறிவூட்டும். காட்டின் பல பாகங்களிலும் பல்வேறு வகைப்பட்ட புத்துணர்ச்சி பெற்ற வாழ்க்கை முறைகளே நாம் வைத்திருக்க வேண்டும். இவ்வா றல்லாமல், சர்க்காவைச் சுழற்றி, வீட்டில் நூலே நூற்று, ஆழ்ந்த முறையில் விவாதங்களே நடத்திவிட்டால் மட்டும் சுயராஜ்யத்தின் ஆழ்ந்த பொருள் யாது என்பதை நாம் அறிந்துகொள்ள முடியாது. நாட்டின் எங்காவது ஒரு மூலையில் இந்தியா முழுவதும் வடிவம் பெற்று விளங்குமாறு செய்தால், அப் பொழுதுதான் நேரடி அனுபவத்தால் சுயமாக நிச்சயிக்கும் மதிப்பை அறிய முடியும். இந்தியாவிலுள்ள எந்த ஒரு கிராமமாவது தன் சுய முயற்சியால் புத்துயிர் பெற்று வாழ முற்பட்டால் இந்தப் பிரச் னக்குத் தீர்வு காணும் பாதையில் ஓர் அடி எடுத்து வைத்ததாக முடியும், - இந்தியாவுக்குத் தேவையான பல திறப்பட்ட ஆக்க முயற்சி களே மேற்கொள்வதானுல் அதற்கு கம்முடைய சக்தி முழுமையும் தேவைப்படும். அந்தச் சக்தியை, ஒரே இலக்கை நோக்கிச் செல்லும் பல திறப்பட்ட பாதைகளிலும் செலவு செய்யும்பொழுதுதான் நாம்