பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 0 அனைத்துலக மனிதனை நோக்கி குரூசோ கினைவுக்கு வருகிருன். அன்பு, செயல் என்ற இரண்டின் மூலந்தான் முழுத் தன்மை பெற்ற அறிவைப் பெற முடியும் என் பதை நாம் நினைவில் பதித்துக் கொள்ள வேண்டும். ஏனென்ருல் அறிவின் பயன் ஞானமே தவிர ஆடம்பர மன்று. இத்தகைய நிறுவனம், ஒருவனே எத்தகைய அவசரத்துக்கும் தேவையான உடல், மன கிலேயுடன் இருக்குமாறு செய்வதுடன்மட்டு மல்லாமல், வாழ்வு, உலகம் ஆகிய இரண்டின் அழைப்பை ஏற்றுக் கொள்ளும் நிலையிலும் இருக்கச் செய்யும். இவை இரண்டின் இண்டயே ஒர் ஒன்றலைக் காணும் ஞானத்தையும் அந்த நிறுவனம் அளிக்கும். அத்தயை நிறுவனத்தில் குழந்தைகட்குக் கற்பிக்கப்படும் முதல் பாடம், கிடைப்பவற்றைக் கொண்டு வேண்டுமானதைத் தயார் . செய்து கொள்ளும் பழக்கமாகும். திடீரென்று செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவதற்கேற்ற முறையில், தயாரித்து வைக்கும் பொருள்கள் அங்கு இராமற் செய்யப்படும். இவ்வாறு செய்வது எளிய வாழ்க்கைபற்றி யல்லாமல், ஆக்க வாழ்க்கை பற்றிய Liłł's - மாகும் என்பதைச் சொல்லிவிட விரும்புகிறேன். ஏனென்ருல், வாழ்வு பல கோணங்களில் வளர நேரும்போது அதன் மத்தியில் உயிருள்ள ஆளுமை இருப்பின், ஆக்கல் ஒற்றுமையும் அங்கே இருக்கும்; அதனுடைய கனத்தை அதுவே அழகுடன் தாங்கிச் செல்லும் ; மேலும் கூட்டத்தை அதிகப் படுத்தும் முறையில் ஓர் எண்ணிக்கை என்ற முறையில் அது இராது. - இத்தகைய ஒரு கனவை எங்கள் பள்ளிக்கட்டத்தில் நனவாக்கி யுள்ளோம் என்று சொல்ல என் மனம் விரும்புகிறது. இது பற்றிய ஒரு தொடக்கத்தைத்தான் இப்பொழுது செய்துள்ளோம். இயற்கையினிடத்து அன்பு செய்வதன் மூலமாக, அதில் விடுதலை காணும் சந்தர்ப்பங்களைக் குழந்தைகட்கு ஏற்படுத்தியுள்ளோம். ஏனெனில் அன்புதான் சுதந்திரமாகும். எளிதாகக் கிடைக்கக் கூடிய பொருள்களுக்கு கம் ஆன்மாவையே விலையாகக் கொடுக்கும் பைத்தியக்காரத்தனத்தை அது போக்கி விடுகிறது. வறுமையின் ஆன்மீகத்தைப் பெரிதுபடுத்தி, எளிய வாழ்க்கையின் பெருமை யைப் பேசுகிறவர்களே நான் அறிவேன். வறுமை என்பது வெறும் எதிர்மறையாக இருக்கும்பொழுது அதற்குத் தனி மதிப்புக் கொடுக்க கான் விரும்பவில்லை. எப்பொழுது, மனம் உண்மையின் ஆழ்ந்த அழைப்பை அறியும் கூர்மையான சக்தியைப் பெறு கின்றதோ, அப்பொழுதுதான் பொய்மையின் அழைப்பிலிருந்து அது விடுபட முடியும். எளிதாக மகிழ்சியடையும் சக்தியைப் போக்கி, கேவலம் தட்டுமுட்டுச் சாமன்களிலும், விலை யுயர்ந்த