பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 அடுத்த கைநொடிப் பொழுதிலே, பலமாகக் கனைத்துக் கொண்டே, கம்பீரத்தோடு தோன்றினர். ஆதியப்ப அம்பலம். ஒருமுறை வீரமணியையும் சின்னச்சாமி அம்பலத்தையும் பொறுமையுடன், பதருமல் அளந்து பார்த்தார். பிறகு, நரை முடி திகழ்ந்த குடுமியை முடிந்துகொண்டார். வெளுத்த மீசையை மேலும் முறுக்கி விட்டுக் கொண்டார், அவர், வில் லாதி வில்லன் சேர்வையை ஒப்ப, ராஜ கம்பீரத்துடன் இருவ ரையும் மீண்டும் பார்த்தார். - ● நல்ல விளக்கு ஏற்றினுள் - வீரமணி மாப்பிள்ளை முறுக்குடன் முறைப் பாட்டுக்கா ரன் போன்று அகம்பாவத்தோடு திண்ணைச் சாய்மானத்தில் சாய்ந்திருந்தான். சின்னச்சாமியைப் பேய் அடித்துவிட்டதோ? குனிந்த தலையை திமிர்த்தவில்லை, அவர். . . . . . . . . . "Aாப்...... வீரமணி, உங்க வீராப்புப் பேச்சு முடிஞ்சி ருச்சா? இன்னம் அஞ்சாறு பேசப்புடாதா?-இந்தச் சகுனிக் குக் கும்மாளமாயிருக்குமே?..." என்று தொடங்கினர், ஆதி யப்ப அம்பலம். தன்னை முறைத்துப் பார்த்த சின்ன்ச்சாமியை பதிலுக்கு முறைத்துப் பார்த்துவிட்டு, "சின்னச்சாமி, நீ முண்டி aயோ, நாந்தான் ஒனக்கு எமன்! ... ம்..” என்று ஓங்காரமா கச் செப்பினர். பிறகு மீண்டும் வீரமணியின் பக்கம் திரும்பி "வீரமணி, இப்ப ஓங்களுக்குச் சொல்லுறேன். அறிஞ்சு கெட்டானும் ராவணன் அறியாமக் கெட்டாளும், துரியோத என். அந்தக் கதையிலே இருக்கு இப்ப ஓங்க நடப்பு: எத் தனயோவாட்டி ஓங்களுக்குப் படிச்சுப் படிச்சுக் குடுத்தேன்.