பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 எரியுமே. அது கணக்கிலேதான் இப்பவும் எரியுது!... ரத்தப் பசை மாற மாற, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புகமாத் தானே தோனும்?...' என்று தனக்குத் தானே கருதியவராக நாலு செம்பு தண்ணீர் எடுத்துத் தலையில் ஊற்றிக் கொண் டார். வேட்டியின் முனையில் முடிந்திருந்த பணத்தைத் தொ: டுப் பார்த்துக்கொண்டார், - - விபூதிப் பையில் இருந்து துளி விபூதியை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு. மறு. துளியை எடுத்து நெற்றி மேட்டில் இட்டுக்கொண்டு, குடுமியை ஒரு தட்டுத் தட்டிவிட்டவராக தம் மகளின் வாழ்வை எண்ணித் தியானம் செய்தபின், ஞாபக மாக வண்டியை அடைந்து வண்டியின் உட்புறத்தில் இருந்த மூங்கில் கழி ஒன்றில் தொங்கவிடப்பட்டிருந்த பையை எடுத் துக்கொண்டு விட்டிற்குள் நுழைந்தார். அப்போது, "ஆமா, தங்கச்சி. நான் கொண்டிருக்கிற நெனப்பு இது. இதுப்படி நடக்கிறதுக்கு ஆத்தா முத்தவளும் அக்கரைச் சீமையிலேயிருந்து வரப்போற எங்க சொந்த் அபித்தை மகன்காரவுகளும் அனுசரணையாயிருந்தாத்தான் என் ளுேட க ைவிக்க முடியும் ..." என்று திர்மானமான குரலு டன் தம் மகள் செப்பி முடித்ததை ஒண்டலில் ஒதுங்கி நின்று கேட்கவும் அவர் தவறவில்லை. o > . . . . . . ... "மெய்தான் அக்கா: என்ருள் பொன்னத்தா: மகளின் வாய் வார்த்தைகளே அடித்தளமாக்கி மறுபடியும் அவள் பேச்சை வைத்துச் சிந்தித்துப் பார்த்த அம்பலத்துக்கு ஏதோ ஒரு சம்பவம் சூடுபிடித்திருக்க வேண்டும் என்கிறவரை யில் அவருள் ஓர் அனுமானம் கருக்கொண்டிருந்தது. பசிக் கிறக் தம் அவரைத் தள்ளாடச் செய்தது. ஆகவே, அவர் உள்ளே விரைந்தார்.முற்றத்தை ஒட்டித் தணிந்திருந்த தென்னங் கிற்று கள் சில தாறும்ாருகப் பிரிந்திருந்தன. மூன்றும்நாள் விடிகாமத் தில் பெய்த கோடை மழை அற்பசொற்பமில்லவே. இந்த