பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼金雳 மடிப் பிச்சை 2-ழவு மழை பெய்தது. நிலவு இனிமேல்தான் வரவேண்டும். *~. - அன்னக்கிளி பாயும் படுக்கையுமானுள். சுயப் பிரக்ளுை. இழந்திருந்த நிலையில் காணப்பட்டாள். விழிகள் மூடிய கோலத் துடன் இருந்தன. இமைகள் மாத்திரம் அவ்வப்போது துடித் தன. விழிக் கடைகளில் நீர்க் கசிவு இருந்தது. தண்ணீர் ஒடும் வடிகால் தகரத்தில் பட்டுத் தெறித்த நீர்த் துளிகளின் அரவம் தெளிந்தது. ஆதியப்ப அம்பலகாரரின் திறந்த கண்கள் திறந்தவாறே இருந்தன. வழிந்த கண்ணீர் வழித்தபடி இருந்தது. வெடித்த வெய்துயிர்ப்பு வெடித்தவண்ணமாக இருந்தது. தடையின் மேல் விட்டத்தில் 'ஒழுகல் ஏற்பட்டது. நீர்த் துளியின் சிதறல்கள் அன்னக்கிளியின் கால்மாட்டில் இரைந்தன. அதை உணர அன்னத்துக்கு நினைவு கிடையாது. அதை அறிய அம்பலத்துக்கு உணர்வு இல்லை. :... . . . o மழை நின்றது. இருந்தாற்போன்று முனகல் ஒலி கேட்டது. பொல்லாக் களுக் கண்ட நமைச்சலில் விழித்துப் பார்த் தார். ஆம்பலம். । அன்னக்கிளியின் உதடுகள்-வெளுத்த உதடுகள்-முனகிக் கொண்டேயிருந்தன: "மச்சான்! ... நீங்க Tಣೆ&T ஏச்சுப்பு: மாட்டீங்களே, மச்சான்!. அயித்தை மவனே!. சொல்லுங் களேன்! ... எனக்கு மானம்தான் சொத்து சொகம், உகிர் அல் லாம்! ... அதுதான் எனக்கு பொறந்த ஆட்டுச் சீதனமாக் தம்! ... புட்டுவச்சுச் சொல்லுங்க.." - o