பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 "ஓ!" என்று அவள் சிரித்தாள். “அந்த இனிப்புச் சங்கதி எனக்கும் தெரியுமுங்க அப்பா!" என்ருள். 'நல்ல வேளை!” என்று அவர் சிரித்தார். "ஆத்தானோ! கைச்சமையல் இன்னம் கொஞ்ச காலத்துக்குத்தான் இந்தக் கிழவனுக்கு லவிக்கும். அதாலே பரவாயில்லே! எப்படியும் எங் களு பலிதமடைஞ்சிட்டாப் போதும்!” என்று பேச்சுச் சேர்த்தார். - "அப்பா, ஒங்க நல்ல களு நல்லதனமாப் பலிக்கட்டும். ஆளுக்க, எங்க கைச்சமையல் மட்டும் எப்பவுமே ஒங்களுக்குக் கிட்டத்தான் கிட்டும்! ... அவுக’ உங்க பேரிலே உசிரையே வச்சிருக்கிறவங்களாச்சே?... அவுகளை நீங்க தோளில்ே போட்டு வளர்த்தவங்களாச்சே?. எதொண்ணையும் மறந்துபுே மாட்டாங்க, அயித்தை பெத்த மகன்!. அவுசு உடம்பு உங்க அன்புக்கும் பாசத்துக்கும் . சொந்தமாக்கும்! ...” என்றுள் அவள், கயல் விழிகள் படபடவென்று மூடித் திறந்தவண்ணம். "அப்படின்கு மாப்பிள்ளையோட நேசமும் மனசும் ஒனக் குப் பாத்தியம்னு குடிக்காணியாட்சிச் சொந்தம் கொண்டாடு தியா, ஆத்தா!... அதான் சரி. மாப்பிள்ளை ஒஞ் சொத்துத் தான் என்கிறது ஊர் நாடு பூராவுக்கும் அத்துபடியான விவர மாச்சே . . .” பொட்டலத்தில் இருந்து விரல்பிடி புகையிலையை அள்ளி வாயில் போட்டு கொடும்பில் அடக்கிக் கொண்டார், அம்ப ம்ை. வேட்டி திலப்பில் முடிச்சுப் போட்டு வைத்திருந்த பணத்தை அவிழ்த்ஆ மகளிடம் நீட்டினர். 'வண்டிச் சத்தம் குவா நாலு இருக்குது. கை ஞாபகத்தோட உண்டிக் கலயத் திலே வச்சுப்பிடு நடை விட்டத்திலே தொங்கப் போட்டிருக் கிற பையிலே கருப்பட்டியும் வெத்திலே அரைக் கவுளியும் இருக் குது. எடுத்து வை. பத்துக்காகச் சோள முறுக்கும் வாங்கி யாந்தேன். முறுகல் மாளறதுக்குள்ளே அதையும் புட்டுப்