பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 ஆறு நாழிகைப் பொழுது இருக்கும். கும்பாவை எடுத்து வைத்துக் கொண்டு கஞ்சி குடிக்கல மென்று நினைத்த அன்னக்கிளிக்கு, அலமாரியில் இருந்த வீர மணியின் கடிதத்தைப் படிக்க வேண்டும் என்னும் துடிப்பு ஏற். படவே, கும்பாவை அடுப்பங்கரையிலே வைத்துவிட்டு, உள்ளே வந்து கடிதத்தை எடுத்தாள். அன்பைத் தொடுவது போன்ற உணர்வுடன் அதைத் தொட்டாள். - தொட்ட விரல் மணத்தது. படிக்கத் தொடங்கிளுள். சொற்கள் கூட்டிய உதடுகள் மணத்தன. - "மகாபூர் ரீ அம்மான் அவர்கள் சமூகத்துக்கு வீரமணி தண்டவிட்டு எழுதிக் கொண்டது. இப்பவும் இவ்விடம் சேமம். அவ்விடம் சேமத்துக்குதாங்கள். அன்னக்கிளி சேமத்துக்கு-நம் குல தெய்வமான் அங்காளம்மையைப் பிரார்த்திக்கிறேன். ... :"... . . . . ,- . . மேல வளவுச் சுப்பையாச் செட்டியார் மகன் சுந்தரம் வசம் உங்களுக்கும் அன்னக்கிளிக்கும் துணிமணிகள் குடுத்து